பதிவு செய்த நாள்
29 ஏப்2013
00:50
இந்தியா - ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையே, தாராள வர்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகும் பட்சத்தில், அது உள்நாட்டு ஆயத்த ஆடைகள் துறையின் வளர்ச்சிக்கு வழிகோலும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள், தங்கள் பொருட்களை ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் விற்பனை செய்வதற்கு, 11 சதவீத வரி செலுத்துகின்றனர்.
சுங்க வரி:அது போன்று, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் ஏற்றுமதி செய்யும் ஆயத்த ஆடைகளுக்கு, இந்தியாவில், 30 சதவீதம் சுங்க வரி விதிக்கப்படுகிறது.அதே சமயம், வங்கதேசத்தில் இருந்து இறக்குமதியாகும், ஆயத்த ஆடைகளுக்கு, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள், வரி விதிப்பதில்லை. சீன ஆயத்த ஆடைகளுக்கு, 7 சதவீத வரி விதிக்கப்படுகிறது.
இதனால், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள், வங்கதேசத்தில் இருந்து, மலிவு விலை ஆயத்த ஆடைகளை அதிகம் இறக்குமதி செய்து கொள்கின்றன.
வங்கதேசத்தின் போட்டியை, இந்தியா எதிர்கொள்ள வேண்டுமென்றால், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுடன், தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது அவசியம் என, ஆயத்த ஆடை துறையினர் தெரிவித்துள்ளனர்.இரு தரப்பு இறக்குமதியில், பரஸ்பரம் வரி விதிப்பு இருக்காது என்பதால், ஆயத்த ஆடைகளின் விலை குறைந்து, அவற்றுக்கான தேவை அதிகரிக்கும். மேலும் ஜவுளி மற்றும் ஆடைகள் ஏற்றுமதி துறைகளில், 30 லட்சம் வேலை வாய்ப்புகளும் உருவாகும் என, அவர்கள் மேலும் கூறினர்.
வங்கதேசம்:"இந்த ஒப்பந்தம் மூலம், ஐரோப்பிய நாடுகளுக்கான இந்தியாவின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, 30-40 சதவீதம் அதிகரிக்கும்' என, இந்திய ஆடைகள் உற்பத்தியாளர் சங்க தலைவர் ராகுல் மேத்தா தெரிவித்தார்.இந்தியா, 27 உறுப்பு நாடுகளை கொண்ட ஐரோப்பிய கூட்டமைப்பிற்கு, ஆண்டுக்கு, 500 கோடி டாலர் (27 ஆயிரம் கோடி ரூபாய்) மதிப்பிலான ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்து வருகிறது.அதே சமயம், வங்கதேசம், ஐரோப்பிய கூட்டமைப்பிற்கு, 800 கோடி டாலர் (43,400 கோடி ரூபாய்) மதிப்பிலான ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்கிறது.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|