அதிக வரத்தால் மாதுளை விலை வீழ்ச்சிஅதிக வரத்தால் மாதுளை விலை வீழ்ச்சி ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு ...
வர்த்தகம் » ஜவுளி
ஐரோப்பாவுடன் தாராள வர்த்தக ஒப்பந்தம்:ஆயத்த ஆடை துறை வளர்ச்சிக்கு வித்திடும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2013
00:50

இந்தியா - ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையே, தாராள வர்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகும் பட்சத்தில், அது உள்நாட்டு ஆயத்த ஆடைகள் துறையின் வளர்ச்சிக்கு வழிகோலும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள், தங்கள் பொருட்களை ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் விற்பனை செய்வதற்கு, 11 சதவீத வரி செலுத்துகின்றனர்.

சுங்க வரி:அது போன்று, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் ஏற்றுமதி செய்யும் ஆயத்த ஆடைகளுக்கு, இந்தியாவில், 30 சதவீதம் சுங்க வரி விதிக்கப்படுகிறது.அதே சமயம், வங்கதேசத்தில் இருந்து இறக்குமதியாகும், ஆயத்த ஆடைகளுக்கு, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள், வரி விதிப்பதில்லை. சீன ஆயத்த ஆடைகளுக்கு, 7 சதவீத வரி விதிக்கப்படுகிறது.
இதனால், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள், வங்கதேசத்தில் இருந்து, மலிவு விலை ஆயத்த ஆடைகளை அதிகம் இறக்குமதி செய்து கொள்கின்றன.

வங்கதேசத்தின் போட்டியை, இந்தியா எதிர்கொள்ள வேண்டுமென்றால், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுடன், தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது அவசியம் என, ஆயத்த ஆடை துறையினர் தெரிவித்துள்ளனர்.இரு தரப்பு இறக்குமதியில், பரஸ்பரம் வரி விதிப்பு இருக்காது என்பதால், ஆயத்த ஆடைகளின் விலை குறைந்து, அவற்றுக்கான தேவை அதிகரிக்கும். மேலும் ஜவுளி மற்றும் ஆடைகள் ஏற்றுமதி துறைகளில், 30 லட்சம் வேலை வாய்ப்புகளும் உருவாகும் என, அவர்கள் மேலும் கூறினர்.

வங்கதேசம்:"இந்த ஒப்பந்தம் மூலம், ஐரோப்பிய நாடுகளுக்கான இந்தியாவின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, 30-40 சதவீதம் அதிகரிக்கும்' என, இந்திய ஆடைகள் உற்பத்தியாளர் சங்க தலைவர் ராகுல் மேத்தா தெரிவித்தார்.இந்தியா, 27 உறுப்பு நாடுகளை கொண்ட ஐரோப்பிய கூட்டமைப்பிற்கு, ஆண்டுக்கு, 500 கோடி டாலர் (27 ஆயிரம் கோடி ரூபாய்) மதிப்பிலான ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்து வருகிறது.அதே சமயம், வங்கதேசம், ஐரோப்பிய கூட்டமைப்பிற்கு, 800 கோடி டாலர் (43,400 கோடி ரூபாய்) மதிப்பிலான ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்கிறது.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)