பதிவு செய்த நாள்
02 மே2013
00:17
மும்பை:நடப்பாண்டு மார்ச் மாதத்தில், வங்கிகள் வழங்கிய கடன் வளர்ச்சி,15.7 சதவீதம் என்ற அளவில் சரிவ டைந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில்,இது, 20.3 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.கணக்கீட்டு மாதத்தில், உணவு பதப்படுத்தல், ஜவுளி, தோல் மற்றும் தோல் பொருட்கள், மரம் மற்றும் மரச் சாமான்கள் தவிர்த்த, பெரும்பாலான துறைகளில் வங்கி கடன் வாங்குவது மிகவும் குறைந்து போயிருந்தது.
குறிப்பாக,ரசாயனம்,மற்றும் ரசாயனப் பொருட்கள், கண்ணாடி சாமான்கள், சிமென்ட் சார்ந்த பொருட்கள்,மோட் டார் வாகனம் ஆகிய துறைகளில் வங்கி கடன் வளர்ச்சி ஓரளவிற்கு நன்கு இருந்தது.அதேசமயம்,வேளாண் துறை க்கு வழங்கப்பட்ட கடன் வளர்ச்சி, 8.1 சதவீதம் என்ற அளவில் மிகவும் சரிவடைந்திருந்தது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 13.3 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்திருந்தது.சேவை மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கான வங்கி கடன் வளர்ச்சி முறையே, 13.6 சதவீதம் மற்றும் 14.7 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|