பதிவு செய்த நாள்
02 மே2013
00:20
புதுடில்லி:தங்க நாணயம் மற்றும் தங்கம் சார்ந்த முதலீட்டுதிட்டங்களின் விற்பனையில், வங்கிகள் விதிமுறைப்படி நடக்கின்றனவா என்பதை, ரிசர்வ் வங்கி, கண்காணிக்க துவங்கியுள்ளது.வங்கி கிளைகளில், ஊழியர்கள் உள்ளிட்ட சிலர், தங்க நாணயங்கள் வாங்குமாறு வற்புறுத்துவதாக, ஏராளமான வாடிக்கையாளர்கள், ரிசர்வ் வங்கியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சில வங்கி ஊழியர்கள், தங்கம் சார்ந்த முதலீட்டு திட்டங்கள் மற்றும் பிற சொத்து நிர்வாக திட்டங்களில் முதலீடு செய்யுமாறு வற்புறுத்துவதாகவும், வாடிக்கையாளர்கள் புகார் கூறியுள்ளனர்.இதையடுத்து, புகார்களுக்கு ஆளாகியுள்ள, 30 வங்கிகளின் செயல்பாடுகளை, ரிசர்வ் வங்கி தீவிரமாக கண்காணிக்கத் துவங்கியுள்ளது. ஒரு சில வங்கிகளில், உயரதிகாரிகள், தமக்கு கீழ் உள்ள ஊழியர்களை நிர்பந்தப்படுத்தி, தங்க நாணயங்களை விற்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து, தங்க நாணயங்கள், சொத்து நிர்வாக முதலீட்டு திட்டங்கள் ஆகியவற்றின் விற்பனையில் ஈடுபட்டுள்ள, வங்கிகள் மற்றும் அவற்றின் பிரச்னைகள் குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளுமாறு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|