பதிவு செய்த நாள்
02 மே2013
00:23
புதுடில்லி:மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, அடுத்த, 2 - 3 ஆண்டுகளில், 2.5 சதவீதமாக சரிவடையும் என, மத்திய திட்டக் குழுவின் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்தார்.தற்போது, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 5 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
சர்வதேச பொருளாதார சுணக்க நிலையால், இந்தியாவும் பல்வேறு இடர்பாடுகளை சந்திக்க வேண்டியிருந்தது. குறிப்பாக, நாட்டின் ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரித்தது. இதனால், ஒட்டு மொத்த அளவில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகவும் சரிவடைந்து போனது.கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, வரலாறு காணாத அளவிற்கு, 6.7 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்திருந்தது. தற்போது, நிலைமை ஓரளவிற்கு சாதகமாக அமைந்துள்ளதால், நடப்பு கணக்கு பற்றாக்குறை, படிப்படியாக குறையும் என, மான்டேக் சிங் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|