டப்பு கணக்கு பற்றாக்குறை 2.5 சதவீதமாக குறையும்: மான்டேக்டப்பு கணக்கு பற்றாக்குறை 2.5 சதவீதமாக குறையும்: மான்டேக் ... முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி 2.9 சதவீதம் வளர்ச்சி முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி 2.9 சதவீதம் வளர்ச்சி ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
உற்பத்தி குறைந்ததால் இஞ்சி விலை கிடுகிடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2013
00:35

கொச்சி:இஞ்சி உற்பத்தி குறைந்ததால், அதன் விலை கிடு கிடு வென உயர்ந்து வருகிறது.உலகளவில், ஆண்டுக்கு 8.35 லட்சம் டன் இஞ்சி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில், ஆண்டுக்கு 2.75 லட்சம் டன் இஞ்சி உற்பத்தியாகிறது.
மண் வளம்:இந்தியாவை அடுத்து, சீனா, நைஜீரியாவிலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு இஞ்சி உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் இஞ்சி உற்பத்தி குறைந்ததால், சர்வதேச சந்தையில் இந்திய இஞ்சிக்கு தேவை அதிகரித்தது.இதையடுத்து, கேரள விவசாயிகள் பலர், இஞ்சிக்கேற்ற மண்வளம் கொண்ட கர்நாடக மாநிலத்தில், நிலங்களை குத்தகைக்கு எடுத்து, இஞ்சி விவசாயத்தில் ஈடுபடத் துவங்கினர். இதன் விளைவாக, நாட்டின் இஞ்சி உற்பத்தி அதிகரித்து, அதன் விலை குறையத் துவங்கியது.
ஓரிரு ஆண்டுகளுக்கு முன், இஞ்சியின் பண்ணைக் கொள்முதல் விலை, கிலோ 7 ரூபாய் என்ற அளவிற்கு குறைந்து காணப்பட்டது. இதைவிட சீனா, நைஜீரியா நாடுகளின் இஞ்சி விலை மிகவும் குறைவாக இருந்தது.இதனால், கர்நாடகத்தின் இஞ்சி விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனிடையே, கச்சா இஞ்சி விலை உயர்ந்ததால், விதை களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, இஞ்சி உற்பத்தி குறைந்தது.மேலும், கர்நாடகாவில் நிலங்களுக்கான குத்தகை தொகை, கூலி ஆகியவற்றின் உயர்வினால், கடன் வாங்கி இஞ்சி விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகள், பயிரிடும் பரப்பை குறைத்துக் கொண்டனர்.
மதிப்பீடு:இதனால், ஒட்டுமொத்த அளவில் இஞ்சி உற்பத்தி குறைந்துள்ளது. கொச்சி சந்தையை பொறுத்தவரை, 8,000 மூட்டைகள் இஞ்சி இருப்பு உள்ளது. புதிய பருவத்தில், 300 மூட்டைகள் மட்டுமே வரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. அதுவும், நவம்பரில் தான் புதிய இஞ்சி வரத்து இருக்கும் என்பதால், வரும் மாதங்களில், இஞ்சிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் விலை மேலும் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.வயநாட்டில், தற்போது, பண்ணை கொள்முதலில், ஒரு கிலோ இஞ்சியின் விலை, 55 -60 ரூபாயாக உயர்ந்துள்ளது. கொச்சி சந்தையில், உலர வைக்கப்பட்ட இஞ்சி, கிலோ 205 - 210 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
கையிருப்பு:இந்திய சந்தைகளில், தற்போது ஒரு லட்சம் மூட்டைகள் இஞ்சி கையிருப்பில் உள்ளது. மாதம் சராசரியாக, 25 ஆயிரம் மூட்டை இஞ்சி பயன்படுத்தப் படுகிறது. இதன்படி, கணக்கிட்டால், அடுத்த நான்கு மாதங்களுக்கு மட்டுமே, அதாவது ஆகஸ்ட் மாதம் வரை இஞ்சி, தட்டுப்பாடின்றி கிடைக்கும் என, தெரிகிறது.அதன் பிறகு, நவம்பர் வரை, இஞ்சி விலை மேலும் அதிகரிக்கும் என, வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)