பதிவு செய்த நாள்
02 மே2013
09:29
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (9.05 மணியளவில்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 44.92 புள்ளிகள் குறைந்து 19459.26 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 34.90 புள்ளிகள் குறைந்து 5895.30 புள்ளிகளோடு காணப் பட்டது. செவ்வாய் கிழமை நடைபெற்ற வர்த்தகத்தின் போது, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 116.68 புள்ளிகள் அதிகரித்து, 19,504.18 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,622.68 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 19,317.38 புள்ளிகள் வரையிலும் சென்றது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், இந்துஸ்தான் யூனிலிவர், விப்ரோ உள்ளிட்ட, 18 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், ஹிண்டால்கோ, எச்.டீ.எப்.சி. பேங்க், உள்ளிட்ட, 12 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 26.10 புள்ளிகள் உயர்ந்து, 5,930.20 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,962.30 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,867.80 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|