வரி ஏய்ப்போரை விட மாட்டேன் : ப.சிதம்பரம் சபதம்வரி ஏய்ப்போரை விட மாட்டேன் : ப.சிதம்பரம் சபதம் ... சென்னை வணிக வளாகங்களுக்கு பெருகும் மவுசு காலியிடங்களின் எண்ணிக்கை குறைகிறது சென்னை வணிக வளாகங்களுக்கு பெருகும் மவுசு காலியிடங்களின் எண்ணிக்கை ... ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
அதிக சந்தை மதிப்புள்ள நிறுவன பங்குகளில்அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2013
01:03

மும்பை:கடந்த ஆறு ஆண்டுகளில், அன்னிய நிதி நிறுவனங்கள், அதிக சந்தை மதிப்பை கொண்டுள்ள நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது.அதே சமயம், இதே காலத்தில், குறைந்த சந்தை மதிப்பை கொண்டுள்ள நிறுவனப் பங்குகளில் முதலீடு குறைந்துள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு மார்ச் இறுதி முதல், நடப்பாண்டு, மார்ச் 31ம் தேதி வரை, மும்பை பங்குச் சந்தையின் 'சென்செக்ஸ்' குறியீட்டில் இடம்பெற்றுள்ளவற்றுள், 28 நிறுவனப் பங்குகள் மீதான, அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு, 18.4 சதவீதம் அதிகரித்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் 'நிப்டி' குறியீட்டில் அடங்கிஉள்ளவற்றுள், 46 நிறுவன பங்குகள் மீதான, அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு, 19.7 சதவீதம் உயர்ந்துள்ளது.
அதே சமயம், இதே காலத்தில், சிறிய அளவில் சந்தை மதிப்பை கொண்டுள்ள, 275 நிறுவனப் பங்குகளில், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு, 6.8 சதவீதம் சரிவடைந்து உள்ளது.சென்ற 2012ம் ஆண்டு, 'சென்செக்ஸ்', 25.7 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, நடப்பாண்டு, தற்போது வரை, 0.1 சதவீதம் குறைந்துள்ளது.நடப்பாண்டு, தற்போதுவரை, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில், 1,060 கோடி டாலர் முதலீடு செய்துள்ளன. இது, சென்ற ஆண்டு, இதே காலத்தில், 2,450 கோடி டாலராக இருந்தது.
சென்ற ஜனவரி மற்றும் பிப்ரவரியில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய நிறுவன பங்குகளில், முறையே, தலா, 410 கோடி டாலர் முதலீடு செய்துள்ளன. இது, சென்ற மார்ச்சில், 50 சதவீதம் குறைந்து, 210 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.நடப்பு ஏப்ரல் மாதம் 1ம் தேதியில் இருந்து 22ம் தேதி வரை, அன்னிய நிதி நிறுவனங்கள், 22.17 கோடி டாலரை, இந்திய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளன.
பங்குச் சந்தையில், சிறிய நிறுவனப் பங்குகள் மீதான வர்த்தகம் குறைவாக உள்ளது. மேலும், நிர்வாகத் திறன் குறித்த அச்சமும், ஒளிவுமறைவான செயல்பாடுகளும், அவற்றின் பங்குகளில் முதலீடு செய்வதற்கு தடைக் கற்களாக உள்ளன என, இத்துறையை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)