பதிவு செய்த நாள்
03 மே2013
08:17
சென்னை : தமிழக அரசு ஊழியர்களுக்கு, 8 சதவீத அகவிலைப் படி உயர்வை, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து, சட்டசபையில் நேற்று, 110வது விதியின் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 2013 ஜனவரி முதல், 8 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்மூலம், 72 சதவீத அகவிலைப்படி, 80 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதே போல, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியும், 2013 ஜனவரி முதல், 8 சதவீதம் உயர்த்தப்படுகிறது. உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய் துறை கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர்கள், எழுத்தர், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் என, 18 லட்சம் பேர், இதன் மூலம் பயன்பெறுவர். அகவிலைப்படி உயர்வு மூலம், அரசுக்கு, 1,640 கோடி ரூபாய் செலவு ஏற்படும். இவ்வாறு, ஜெயலலிதா கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|