பதிவு செய்த நாள்
04 மே2013
00:44
புதுடில்லி:நாட்டின் யூரியா உர விற்பனை, சென்ற 2012-13ம் நிதியாண்டில், 3.02 கோடி டன்னாக சற்று அதிகரித்துள்ளது. கடந்த 2011-12ம் நிதியாண்டில், இதன் விற்பனை, 2.95 கோடி டன்னாக இருந்தது. ஆக, சென்ற நிதியாண்டில், யூரியா விற்பனை, 2 சதவீதம் சரிவடைந்துள்ளது என, மத்திய ரசாயன மற்றும் உரத்துறை இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா பார்லிமென்டில் தெரிவித்தார்.மதிப்பீட்டு நிதியாண்டுகளில், பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் (பி அண்டு கே) உரங்கள் விற்பனை, 25 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 2.56 கோடி டன்னிலிருந்து, 1.91 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது.
பயிர் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாத ஊட்டச் சத்தாக விளங்கும், யூரியா பயன்பாடு, சென்ற 2010-11ம் நிதியாண்டில், 2.82 கோடி டன் என்ற அளவில் இருந்தது.மேலும், பி அண்டு கே, டீ.ஏ.பி (டை- அமோனியம் பாஸ்பேட்) உரங்களின் பயன்பாடு, சென்ற 2010-11ம் நிதியாண்டில், 1.13 கோடி டன்னாகவும், 2011-12ம் நிதியாண்டில், 1.12 கோடி டன்னாகவும், 2012-13ம் நிதியாண்டில், 92.20 லட்சம் டன்னாக இருந்தது.
இதே நிதியாண்டுகளில், மியூரேட் ஆப் பொட்டாஷ் (எம்.ஓ.பி.,) பயன்பாடு, முறையே, 38.90 லட்சம் டன், 30 லட்சம் டன் மற்றும் 21.30 லட்சம் டன்னாக இருந்தது. இதே போன்று, கலப்பு உரங்கள் பயன்பாடு முறையே, 1.03 கோடி டன், 1.14 கோடி டன் மற்றும் 72.90 லட்சம் டன் என்ற அளவில் இருந்தது.நடப்பு 213-14ம் நிதியாண்டில், ஏப்ரல் மாதத்தில் மட்டும், நாட்டின் யூரியா பயன்பாடு, 6.16 லட்சம் டன்னாக உள்ளது. மேலும், டீ.ஏ.பி., பயன்பாடு, 22 ஆயிரம் டன்னாகவும், எம்.ஓ.பி., பயன்பாடு, 10 ஆயிரம் டன்னாகவும் உள்ளது.சென்ற 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் யூரியா உற்பத்தி, 2.26 கோடி டன் என்ற அளவில் இருந்தது என, அமைச்சர் மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|