பதிவு செய்த நாள்
04 மே2013
00:45
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று சுணக்கமாக இருந்தது. ரிசர்வ் வங்கி, நேற்று வெளியிட்ட அதன் நிதி ஆய்வு கொள்கையில், "ரெப்போ' வட்டி விகிதத்தை, 0.25 சதவீதம் குறைத்தது. மேலும், ரொக்க கையிருப்பு விகிதத்தில், எவ்வித மாற்றமும் செய்யவில்லை.ரிசர்வ் வங்கியின், இந்த அறிவிப்பு, சந்தை எதிர்பார்ப்பிற்கு ஏற்ப அமையவில்லை என்ற காரணத்தால், "சென்செக்ஸ்', 0.81 சதவீத சரிவுடன் முடிவடைந்தது.ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.
நேற்றைய வியாபாரத்தில், வங்கி, பொதுத் துறை, மோட்டார் வாகனம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், பொறியியல், உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 160.13 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 19,575.64 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,744.85 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,542.63 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டாட்டா மோட்டார்ஸ், கெயில் உள்ளிட்ட, 18 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், ஜிந்தால் ஸ்டீல், சன் பார்மா உள்ளிட்ட, 12 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 55.35 புள்ளிகள் சரிவு அடைந்து, 5,944 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 6,000.30 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,930.15 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|