தங்கம் விலை சவரனுக்கு 56 குறைவுதங்கம் விலை சவரனுக்கு 56 குறைவு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு ...
நெடுஞ்சாலை பயணமா....
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2013
15:42

நெடுஞ்சாலை பயணத்தில், எதிர்பாராத இடர்களை சமாளிக்க, கார் பயன்படுத்துபவரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது, நீண்ட தூர பிராயணங்களே காரில் மேற்கொள்பவர்களும் அதிகரித்து கொண்டே வருகிறது. நகருக்குள் கார் ஓட்டுவது என்பது வேறு, நெடுஞ்சாலைகளில் பல மணி நேர நீண்ட பயணம் மேற்கொள்வது என்பது வேறு. இக்கட்டுரையில், நீண்ட நெடுஞ்சாலை பயணம் மேற்கொள்பவருக்கு ஆலோசனைகள் காணலாம்.பயணத்தை சிறப்பிக்கும் போதே, காரின் கண்டிஷன், அதாவது வாகனம் நல்ல நிலையில் உள்ளதா என்பதை, சரி பார்த்துக் கொள்ள வேண்டும் போதுமான எரிபொருள் உள்ளதா? பிரேக் கிளாட்ச் சரியாக இயங்குகின்றதா? கார் டயரின் காற்று அழுத்தம் சரியாக உள்ளதா? ஸ்டெப்னி டயர் தயார் நிலையில் உள்ளதா? ரேடியேட்டர் தண்ணீரின் அளவு சரியாக உள்ளதா? போன்றவை குறிப்பிட்டு சொல்ல கூடியவை.சரி வாகனத்தின் நிலையை சரிபார்த்து, பயணத்தை துவங்கி விட்டோம். பயணம் செய்யும் போது, எதிர்பாராத இடர்களுக்கு என்ன செய்யலாம் என, பார்ப்போம்.
சில நேரங்களில், கார் முழுமையாக செயற்படாத நிலைக்கு சென்றுவிடலாம். அதாவது வாகனத்தை, உங்களால் ஸ்டார்ட் செய்யவே முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. அப்போது தேவையில்லாமல், பதற்றம் அடைவதை விட, உடனடியாக அருகே உள்ள பழுதுபார்க்கும் பணிமனைகளுக்கு தொடர்பு கொள்வது அவசியம். கிட்டதட்ட எல்லா நெடுஞ்சாலைகளிலுமே, இப்படிப்பட்ட சேவை கிடைக்கின்றது. கூடியமான வரை, உங்கள் கார் நிறுவன சேவை மைய தொலைபேசி எண்களை, உங்களில் செல்போன்களிலேயே வைத்திருங்கள், உங்களுக்கு தெரியவில்லை எனில் கூட, பக்கத்தில் உள்ள கடைகளிலோ அல்லது அப்பக்கம் செல்லும் வாகனங்களை உதவி கேட்டால் கூட, அருகில் உள்ள பணிமனைகளை பற்றி அறியலாம்.
வாகனம் நல்ல வேகத்தில் ஓடிக்கொண்டு இருக்கும் போது, திடீரென டயர் பஞ்சர் ஆவது அல்லது டயர் வெடிப்பது நிகழலாம். இது, உங்களை நிலை குலைய செய்ய வைக்கும் என்பது உண்மையே! ஆனால், அந்த நேரத்தில் பதற்றத்துக்கு உள்ளாகி,
பக்கத்தில் சென்றால், வாகனமோ அல்லது மரம் போன்றவற்றின் மேலே இடிக்காமல், சரியாக செயல்பட்டு, வாகனத்தை சாலையின் ஓரத்திற்கு கொண்டு வந்து நிற்க வைக்க வேண்டும். இதுபோன்ற நேரத்தில், ஸ்டியரிங்கை அழுத்தமாக பிடித்துக் கொண்டு, பிரேக்கை மெதுவாக பிடிக்க வேண்டும். அப்படியே கவனமாக, வண்டியை சாலையோரம் நிறுத்தும் படியாக கொண்டு வரவேண்டும். பின்னர், பழுது ஏற்பட்ட டயரை கழட்டிவிட்டு, உங்களிடம் உள்ள ஸ்டெப்னி டயரை மாற்றிவிட்டு பயணத்தை தொடரலாம். மிக நீண்ட பிரயாணத்தில், சரியாக கவனிக்கவில்லை எனில் ரேடியேட்டர் பகுதியில் உள்ள, தண்ணீரின் வெப்பம் அதிகமாகி, நீராவியாகி பேனட் முடிவதையும் பாதிப்புக்கு உள்ளாக்கலாம்.
நீராவியில் பாதிப்பு அதிகம் என்பதால், உடனடியாக நாம் ரேடியேட்டர் மூடியை திறக்க கூடாது. வண்டியை முழுவதுமாக நிறுத்தி விட்டு, வெப்பத்தை தணிக்க வேண்டும். பின்னரே மூடியை திறந்து தேவைப்படும் தண்ணீரை ஊற்ற வேண்டும்.
இவ்வாறு வெப்பம் அதிகமாக செல்லும் போதும், காரில் உள்ள எலெக்ரிக் ஒயர்களின் கசிவு ஏற்படும் போதும், பயணிகளின் கவனக்குறைவினாலும் கூட, காரில் திடீரென, தீ பிடிக்க வாய்ப்பு உள்ளது. இப்படிப்பட்ட சூழல் ஏற்பட்டால், கையடக்கமான சிறிய தீயணைக்கும் கருவியை கொண்டே தீயை அணைக்க வேண்டும். தண்ணீரை கொட்ட கூடாது. காரணம், தண்ணீர் பெட்ரோல் இருக்கும் இடத்தில் செல்லும் போது, பெட்ரோல் தண்ணீரின் மேல் மிதந்து, எல்லா இடங்களிலும் தீ மிக எளிதாக பரவ வழிவகுத்து
விடும். எனவே, எப்போதும் காரில் கையடக்க தீயணைக்கும் கருவி இருப்பது நல்லது என்பதை விட அவசியம்.எப்போதும், சாலைவிதிகளை முறையாக கடைபிடித்து ஓட்டவேண்டும் என்பதை, அனிச்சை செயலாக செய்ய வேண்டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)