அன்னிய செலாவணிகையிருப்பு 160 கோடி டாலர் உயர்வுஅன்னிய செலாவணிகையிருப்பு 160 கோடி டாலர் உயர்வு ... பங்குகள், கடன்பத்திர விற்பனை வாயிலாக நிறுவனங்கள் திரட்டிய தொகை ரூ.30,859 கோடி பங்குகள், கடன்பத்திர விற்பனை வாயிலாக நிறுவனங்கள் திரட்டிய தொகை ரூ.30,859 கோடி ...
தானிய உற்பத்தி 25.54 கோடி டன்னாக இருக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2013
00:48

புதுடில்லி:நடப்பு 2012-13ம் வேளாண் பருவத்தில், நாட்டின் ஒட்டு மொத்த தானிய உற்பத்தி, 25.54 கோடி டன்னாக அதிகரிக்கும் என, மத்திய வேளாண் அமைச்சகம் மதிப்பீடு செய்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும், நாடு தழுவிய அளவில், அறுவடை செய்யப்படும் தானியங்கள், ஜூன் மாதம் வரையில் கொள்முதல் செய்யப்படுகின்றன. சென்ற பிப்ரவரி மாதம், அறிவிக்கப்பட்ட இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீட்டில், நாட்டின் தானிய உற்பத்தி, 25 கோடி டன் என்ற அளவில்தான் இருக்குமென மதிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், நெல் மற்றும் கோதுமை உற்பத்தி, அதிகரித்துள்ளதைஅடுத்து, உற்பத்தி மதிப்பீடு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது இடம்:இருப்பினும், கடந்த வேளாண் பருவத்தில் உற்பத்தியான, 25.93 கோடி டன் என்ற சாதனை அளவை விட, நடப்பு பருவத்திற்கான தானிய உற்பத்தி மதிப்பீடு சற்று குறைவு தான் என்பது குறிப்பிடத்தக்கது.உலகளவில், தானிய உற்பத்தியில், இந்தியா, இரண்டாவது மிகப்பெரிய நாடாக திகழ்கிறது.நடப்பு வேளாண் பருவத்தில், மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், காலம் தவறிய மழைப்பொழிவு மற்றும் வறட்சியால், @மற்கண்ட மாநிலங்களில், உணவு தானிய உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், இதர மாநிலங்களில், உற்பத்தி அதிகரிப்பால், ஒட்டு மொத்த அளவில் தானிய உற்பத்தி, அதிகரிக்கும் என, தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது.நெல்:நடப்பு வேளாண் பருவத்தில், நாட்டின் நெல் உற்பத்தி, 10.42 கோடி டன்னாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, முந்தைய மதிப்பீட்டில், 10.18 கோடி டன்னாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது, கடந்த ஆண்டின் நெல் உற்பத்தி அளவான, 10.53 கோடி டன்னை விட, குறைவாகும்.

கோதுமை:கோதுமை உற்பத்தி, 9.36 கோடி டன்னாக இருக்கும் என, மறுமதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இது, முதல் மதிப்பீட்டில், 9.23 கோடி டன்னாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம், கடந்த ஆண்டு வேளாண் பருவத்தில், நாட்டின் கோதுமை உற்பத்தி, 9.49 கோடி டன்னாக இருந்தது.பருப்பு வகைகள்:இதர தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் உற்பத்தி முறையே, 3.95 கோடி டன் மற்றும் 1.80 கோடி டன்னாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.

இவை கடந்த ஆண்டு வேளாண் பருவத்தில் முறையே, 4.20 கோடி டன் மற்றும் 1.71 கோடி டன் என்ற அளவில் இருந்தது. நடப்பாண்டிற்கான முதல் மதிப்பீட்டில், மேற்கண்டவற்றின் உற்பத்தி முறையே, 3.85 கோடி டன் மற்றும் 1.76 கோடி டன் என்ற அளவில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுஇருந்தது.நடப்பு வேளாண் பருவத்தில், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, 3.07 கோடி டன்னாக இருக்குமென மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது, பிப்ரவரி மாத மதிப்பீட்டில், 2.95 கோடி டன்னாக இருக்குமென தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாட்டில் பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, தேவையை ஈடு செய்யும் அளவிற்கு இல்லாததால், நம்நாடு மேற்கண்டவற்றை அதிகளவில் இறக்குமதி செய்து கொள்கிறது.பருத்தி:நடப்பு வேளாண் பருவத்தில், நாட்டின் பருத்தி உற்பத்தி, 3.38 கோடி பொதிகளாக (ஒரு பொதி=170 கிலோ) இருக்கும்என, மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது, முதல் மதிப்பீட்டை ஒட்டியே உள்ளது.கரும்பு உற்பத்தி, 33.61 கோடி டன்னாக இருக்குமென மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இது, முதல் மதிப்பீட்டில், 33.45 கோடி டன்னாக இருக்குமென தெரிவிக்கப்பட்டிருந்தது.ஒட்டு மொத்த அளவில், நாட்டின் தானிய உற்பத்தி, நன்கு இருக்கும். என்றாலும், அரசின் சேமிப்பு கிடங்குகளில், போதிய அளவிற்கு இடவசதி இல்லாதது அதிக இடர்பாடு அளிப்பதாக உள்ளது. இதை கருத்தில் கொண்டே மத்திய அரசு, கோதுமை கையிருப்பை குறைக்கும் வகையில், தனியார் நிறுவனங்கள் வாயிலாக, கோதுமை ஏற்றுமதியை மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)