தானிய உற்பத்தி 25.54 கோடி டன்னாக இருக்கும்தானிய உற்பத்தி 25.54 கோடி டன்னாக இருக்கும் ... நோய் தாக்குதலால் ரோஜா உற்பத்தி பாதிப்பு நோய் தாக்குதலால் ரோஜா உற்பத்தி பாதிப்பு ...
பங்குகள், கடன்பத்திர விற்பனை வாயிலாக நிறுவனங்கள் திரட்டிய தொகை ரூ.30,859 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2013
00:52

புதுடில்லி:சென்ற 2012-13ம் நிதியாண்டில், கடன்பத்திரங்கள் மற்றும் பங்கு வெளியீடுகள் வாயிலாக, இந்திய நிறுவனங்கள், 30,859 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டுள்ளன. இது, இதற்கு முந்தைய 2011-12ம் நிதியாண்டில், 48,468 கோடி ரூபாயாக இருந்தது.பங்குச் சந்தை நிலவரங்கள் சாதகமாக இல்லாததால், நிறுவனங்கள் திரட்டிய தொகை சரிவடைந்துள்ளது.

விரிவாக்க நடவடிக்கைகள்:நிறுவனங்கள், தங்களது விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை, கடன் பத்திரங்கள் மற்றும் பங்கு வெளியீடுகள் மூலம் திரட்டிக் கொள்கின்றன.மதிப்பீட்டு நிதியாண்டில், 60 இந்திய நிறுவனங்கள், பல்வேறு வழிமுறைகளில் நிதி திரட்டியுள்ளன. நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக, சென்ற 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 6,718 கோடி ரூபாயையும், டிசம்பர் மாதத்தில், 5,605 கோடி ரூபாயையும் திரட்டிக் கொண்டு உள்ளன.

கடந்த நிதியாண்டில், 11 நிறுவனங்கள், கடன்பத்திர வெளியீடுகள் வாயிலாக, 15,386 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டுள்ளன. முந்தைய நிதியாண்டில், இதே வழிமுறையில், 20 இந்திய நிறுவனங்கள் திரட்டிய தொகை, 35,611 கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது.உரிமை பங்குகள்:அதேசமயம், கடந்த நிதியாண்டில், நிறுவனங்கள், அவற்றின் பங்குதாரர்களுக்கு, உரிமை பங்குகளை ஒதுக்கீடு செய்து திரட்டிய தொகை நான்கு மடங்கு அதிகரித்து, 8,945 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 2,375 கோடி ரூபாயாக குறைந்து காணப்பட்டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)