பதிவு செய்த நாள்
07 மே2013
03:53
புதுடில்லி:நடப்பு பருவத்தில் (அக்.,-செப்.,), நாட்டின் பருத்தி உற்பத்தி, 3.40 கோடி பொதிகளாக இருக்கும் என, பருத்தி ஆலோசனை கழகம் மதிப்பீடு செய்துள்ளதாக, மத்திய ஜவுளி துறை இணை அமைச்சர் பனபாக லட்சுமி லோக் சபாவில் தெரிவித்தார்.நடப்பு பருவத்தில், நாட்டின் பருத்தி உற்பத்தி, 3.40 கோடி பொதிகளாக (ஒரு பொதி=170 கிலோ) இருக்கும். இதில், 2.70 கோடி பொதிகள், உள்நாட்டு பயன்பாட்டிற்கு தேவைப்படும், 81 லட்சம் பொதிகள் ஏற்றுமதியாகும் (கையிருப்பையும் சேர்த்து) என, எதிர்பார்க்கப்படுகிறது. தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு பருத்தி உள்ளதால் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை.கடந்த, 2011-12ம் பருவத்தில், நாட்டின் பருத்தி உற்பத்தி, 3.52 கோடி பொதிகளாக இருந்தது. 1.27 கோடி பொதிகள், ஏற்றுமதி செய்யப்பட்டனஎன, அமைச்சர் மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|