பதிவு செய்த நாள்
07 மே2013
03:54
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கட்கிழமையன்று நன்கு இருந்தது. சில்லரை முதலீட்டாளர்கள், ஆர்வத்துடன் அதிகளவில் பங்குகளை வாங்கியதை அடுத்து, "சென்செக்ஸ்' 0.50 சதவீத உயர்வுடன் முடிவடைந்தது.பல ஆசிய நாடுகளில், முன்னணி நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்தயைடுத்து, அந்நாடுகளில்,பங்கு வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. எனினும், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.நேற்றைய வர்த்தகத்தில், உலோகம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், பொதுத் துறை, நுகர்பொருட்கள், பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 98 புள்ளிகள் அதிகரித்து, 19,673.64 புள்ளிகளில் நிலை கொண்டது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,694.29 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,554.31 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டாட்டா ஸ்டீல், ஹிண்டால்கோ, டி.சி.எஸ்., உள்ளிட்ட, 21 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், ஓ.என்.ஜி.சி., என்.டி.பி.சி., ஐ.டி.சி.,உள்ளிட்ட, 9 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 27.05 புள்ளிகள் உயர்ந்து, 5,971.05 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,976.50 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,928.45 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|