பதிவு செய்த நாள்
07 மே2013
09:13
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (09.05 மணியளவின்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 101.13 புள்ளிகள் அதிகரித்து 19774.77 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 3.50 புள்ளிகள் அதிகரித்து 5974.55 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வியாபாரம் வாரத்தின் முதல் வர்த்தக தினமான நேற்று நன்கு இருந்தது. சில்லரை முதலீட்டாளர்கள், ஆர்வத்துடன் அதிகளவில் பங்குகளை வாங்கியதை அடுத்து, "சென்செக்ஸ்' 0.50 சதவீத உயர்வுடன் முடிவடைந்தது.பல ஆசிய நாடுகளில், முன்னணி நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்தயைடுத்து, அந்நாடுகளில்,பங்கு வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. எனினும், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.நேற்றைய வர்த்தகத்தில், உலோகம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், பொதுத் துறை, நுகர்பொருட்கள், பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|