பதிவு செய்த நாள்
10 மே2013
23:32
கோல்கட்டா: தென்ஆப்ரிக்காவில் உள்ள பிளாட்டினம் சுரங்கங்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதையடுத்து, அந்நாடுகளில், பிளாட்டினம் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பிளாட்டினத்தின் விலை, தங்கத்தின் விலையை காட்டிலும் அதிகரித்துள்ளது.தங்கம்தற்போதைய நிலையில், தங்கத்தின் விலை, ஒரு அவுன்ஸ், 1,452 டாலர் என்ற நிலையில், பிளாட்டினத்தின் விலை, 1,484 டாலராக அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, இந்தியாவில், ஒரு கிராம் பிளாட்டினத்தின் விலை, 3,038 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேசமயம், இதனை காட்டிலும், ஒரு கிராம் தங்கத்தின் விலை, 2,710 ரூபாய் என்ற அளவில் குறைவாகவே உள்ளது.தென் ஆப்ரிக்க நாடுகளில் உற்பத்தி பாதிப்பால், கடந்த இரண்டு வாரங்களில், பிளாட்டினத்தின் விலை, 2 முதல் 3 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. ஏனெனில், மொத்த பிளாட்டினம் உற்பத்தியில், 72 சதவீத சுரங்கங்கள் தென்ஆப்ரிக்காவில்தான் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.இது தவிர, சுரங்க நடவடிக்கை செலவுகளும், கடந்த ஐந்து ஆண்டுகளில், சராசரியாக, 15 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாகவும், இத்தொழிலில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களும், விரிவாக்க நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டாமல் உள்ளன. இதுவும், பிளாட்டினம் உற்பத்தி சரிவிற்கு முக்கிய காரணம்.ஏற்ற இறக்கம்விலை உயர்வு குறித்து, முன்னணி ஜுவல்லரியின் உயர்அதிகாரி கூறியதாவது:தங்கத்தின் விலையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படுவது போன்று, பிளாட்டினத்தில் காணப்படுவதில்லை. எனினும், அவ்வப்போது பிளாட்டினம் விலையில், ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டாலும், இதன் விற்பனை ஆண்டுக்கு, 25 சதவீதம் என்ற அளவில் சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது.எனவே, விலை உயர்ந்தாலும், உள்நாட்டில், பிளாட்டினத்திற்கான தேவையில் பாதிப்பு எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|