பதிவு செய்த நாள்
10 மே2013
23:34
புதுடில்லி: நாட்டின் முன்பேர சந்தைகளில், சென்ற ஏப்ரல் மாதத்தில், 14,77,303 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகத்தை (11,52,471 கோடி ரூபாய்) விட, 28 சதவீதம் அதிகம் என, பார்வர்டு மார்க்கெட்ஸ் கமிஷன் (எப்.எம்.சி.,) தெரிவித்துள்ளது.கணக்கீட்டு மாதத்தில், எரிசக்தி மற்றும் கச்சா எண்ணெய் மீதான வர்த்தகம், 84 சதவீதம் அதிகரித்து, 1.90 லட்சம் கோடியிலிருந்து, 3.50 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி மீதான வர்த்தகம், 34.41 சதவீதம் வளர்ச்சி கண்டு, 5.32 லட்சம் கோடியிலிருந்து, 7.16 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.அதேசமயம், வேளாண் விளை பொருட்கள் மீதான வணிகம், 8.57 சதவீதம் சரிவடைந்து, 1.62 லட்சம் கோடியில் இருந்து, 1.48 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.தாமிரம் உள்ளிட்ட உலோகங்கள் மீதான வர்த்தகம், 1.76 சதவீதம் குறைந்து, 2.68 லட்சம் கோடியிலிருந்து, 2.63 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.உள்நாட்டில், தேசிய அளவில், 6 சந்தைகளும், மண்டல அளவில், 16 முன்பேர சந்தைகளும் உள்ளன. கடந்த 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் முன்பேர சந்தைகளில் வர்த்தகம், 6 சதவீதம் சரிவடைந்து, 170.47 லட்சம் கோடியாக இருந்தது என, எப்.எம்.சி., அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|