பதிவு செய்த நாள்
10 மே2013
23:37
புதுடில்லி: நடப்பு, 2012-13ம் சந்தைப்படுத்தும் பருவத்தில் (ஆக.,-ஜூலை), இந்தியாவின் பருத்தி ஏற்றுமதி, 92 லட்சம் பொதிகளாக (ஒரு பொதி=170 கிலோ) இருக்கும் என, அமெரிக்க வேளாண் துறை மதிப்பீடு செய்துள்ளது.
சீன நாடு:இது, கடந்த பருவத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 34 சதவீதம் குறைவு என்றாலும், முதல் மதிப்பீடான, 72 லட்சம் பொதிகளை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த, 2011-12ம் சந்தைப்படுத்தும் பருவத்தில், நாட்டின் பருத்தி ஏற்றுமதி, 1.42 கோடி பொதிகளாக இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் வரையிலுமாக, இந்தியாவின் பருத்தி ஏற்றுமதி, 89 லட்சம் பொதிகளாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், 85 லட்சம் பொதிகளாக இருந்தது என, அமெரிக்க வேளாண் துறை தெரிவித்துள்ளது.சீனாவிற்கான பருத்தி ஏற்றுமதி குறைந்ததையடுத்து, சென்ற ஏப்ரலில், ஒட்டு மொத்த அளவில், இதன் ஏற்றுமதி, 2 லட்சம் பொதிகளாக குறைந்து போனது.
மறுமதிப்பீடு: நடப்பு பருவத்தில், நாட்டின் பருத்தி உற்பத்தி, 3.40 கோடி பொதிகளாக இருக்கும் என, பருத்தி ஆலோசனை கழகம் மறு மதிப்பீடு செய்துள்ளது. இது, முந்தைய மதிப்பீட்டில், 2.65 கோடி பொதிகளாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் வரையிலுமாக, சந்தைகளுக்கு, 2.90 கோடி பருத்தி பொதிகள் வந்தன.இந்திய பருத்தி கழகத்தின் கைவசம், 21 லட்சம் பருத்தி பொதிகள் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த ஏப்., 26ம் தேதி, இக்கழகம், 25 ஆயிரம் பொதிகளை விற்பனை செய்யும் வகையில், ஏல நடவடிக்கையை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|