இந்தியாவின் பருத்தி ஏற்றுமதி92 லட்சம் பொதிகளாக இருக்கும்இந்தியாவின் பருத்தி ஏற்றுமதி92 லட்சம் பொதிகளாக இருக்கும் ... டீசல் விலை உயர்வு டீசல் விலை உயர்வு ...
தொழில் துறை உற்பத்தி ஒரு சதவீதம் வளர்ச்சி : சென்ற 2012-13ம் நிதியாண்டில்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2013
23:38

புதுடில்லி: நாட்டின் தொழில் துறை உற்பத்தி, சென்ற 2012-13ம் முழு நிதியாண்டில், ஒரு சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இது, இதற்கு முந்தைய 2011-12ம் நிதியாண்டில், 2.9 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது என, மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல், மின்சாரம் மற்றும் தயாரிப்பு துறை உற்பத்தி சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டதை அடுத்து, நடப்பாண்டு மார்ச் மாதத்தில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி, 2.5 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது.
தயாரிப்பு துறை
அதேசமயம், கடந்தாண்டு இதே மாதத்தில், தொழில் துறை உற்பத்தி, மைனஸ் 2.8 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி மாதத்தில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி, 0.6 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்தது என, தற்காலிக மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இது, 0.46 சதவீதம் என்ற அளவில் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளதாக, மறு மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற மார்ச் மாதத்தில், தயாரிப்பு துறை உற்பத்தி, 3.2 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், மைனஸ் 3.6 சதவீதம் என்ற அளவில் சரிவடைந்து காணப்பட்டது. தொழில் துறை உற்பத்தி குறியீட்டு எண் கணக்கிடுவதில், தயாரிப்பு துறையின் பங்களிப்பு, 75 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
சென்ற 2012-13ம் முழு நிதியாண்டில், தயாரிப்பு துறை உற்பத்தி, 1.2 சதவீதம் என்ற அளவிற்கே வளர்ச்சி கண்டுள்ளது. இது, இதற்கு முந்தைய 2011-12ம் நிதியாண்டில், 3 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது.
கடந்த மார்ச்சில், மின் துறை உற்பத்தி, 3.5 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில், இத்துறையின் உற்பத்தி வளர்ச்சி, 2.7 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
சென்ற நிதியாண்டில், மின் துறை உற்பத்தி, 4 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இருப்பினும், இதற்கு முந்தைய நிதியாண்டில், இத்துறையின் உற்பத்தி வளர்ச்சி, 8.2 சதவீதம் என்ற அளவில் சிறப்பாக இருந்தது.
சென்ற மார்ச் மாதத்தில், பொறியியல் துறை உற்பத்தி, 6.9 சதவீதம் என்ற அளவில் சிறப்பாக வளர்ச்சி கண்டு உள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், மைனஸ் 20.1 சதவீதம் என்ற அளவில் மிகவும் சரிவடைந்து காணப்பட்டது.
பொறியியல் துறை
சென்ற முழு நிதியாண்டில், பொறியியல் துறை உற்பத்தி, மைனஸ் 6.3 சதவீதம் என்ற அளவில் சரிவடைந்துள்ளது. கடந்த 2011-12ம் நிதியாண்டில், இத்துறையின் உற்பத்தி, மைனஸ் 4 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டிருந்தது.நடப்பாண்டு மார்ச் மாதத்தில், சுரங்கத் துறை உற்பத்தி, மைனஸ் 2.9 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டு உள்ளது. கடந்தாண்டு இதே மாதத்தில், இத்துறையின் உற்பத்தி, மைனஸ் 1.1 சதவீதம் என்ற அளவில் சரிவடைந்திருந்தது.சென்ற 2012-13ம் நிதியாண்டில், சுரங்கத் துறையின் உற்பத்தி, மைனஸ் 2.5 சதவீதம் என்ற அளவில் சரிவடைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், மைனஸ் 1.9 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டிருந்தது.
நுகர் பொருட்கள் துறை உற்பத்தி, சென்ற முழு நிதியாண்டில், 2.4 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த 2011-12ம் நிதியாண்டில், 4.4 சதவீதம் என்ற அளவில் சிறப்பாக இருந்தது.கடந்த நிதியாண்டில், நுகர்வோர் சாதனங்கள் துறை, 2.1 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 2.6 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
பணவீக்கம்
இடைநிலை பொருட்கள் உற்பத்தி, சென்ற முழு நிதியாண்டில், 1.2 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. அதேசமயம், கடந்த 2011-12ம் நிதியாண்டில், இத்துறையின் உற்பத்தி, மைனஸ் 0.6 சதவீதம் என்ற அளவில் பின்னடைந்துஇருந்தது.சென்ற மார்ச் மாதத்தில், அடிப்படை பொருட்கள் உற்பத்தி, 2.6 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 1.1 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
சென்ற நிதியாண்டில், அடிப்படை பொருட்கள் துறை உற்பத்தி வளர்ச்சி, 2.3 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதேசமயம், இதற்கு முந்தைய நிதியாண்டில், இத்துறையின் உற்பத்தி வளர்ச்சி, 5.5 சதவீதம் என்ற அளவில் சிறப்பாக இருந்தது.
இது குறித்து, பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் அர்விந்த் மயாராம் கூறுகையில், " நாட்டின் தொழில் துறை உற்பத்தி, வளர்ச்சி பாதைக்கு திரும்பி உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இதே நிலை தொடரும் பட்சத்தில், பணவீக்கம் குறையும். மேலும், நடப்பு 2013-14ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 6 சதவீதத்தை தாண்டும்' என்று தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)