பதிவு செய்த நாள்
10 மே2013
23:38
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக் கிழமையன்று விறுவிறுப்புடன் காணப்பட்டது.
சென்ற மார்ச் மாதத்தில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி, 2.5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என்ற செய்தி வெளியானது மற்றும் சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்தது போன்றவற்றால், "சென்செக்ஸ்' 0.72 சதவீத உயர்வுடன் முடிவடைந்தது.
கடந்த மார்ச் மாதத்தில், ஜெர்மன் ஏற்றுமதி அதிகரித்துள்ளது மற்றும் முன்னணி நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள், எதிர்பார்ப்பை விட நன்கு இருந்தது போன்றவற்றால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு இருந்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.நேற்றைய வியாபாரத்தில், மோட்டார் வாகனம், நுகர்வோர் சாதனங்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், உலோகம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைவாக இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 143.58 புள்ளிகள் அதிகரித்து, 20,082.62 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,119.14 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,908.80 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், மாருதி, டாட்டா மோட்டார்ஸ் உள்ளிட்ட, 18 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், கோல் இந்தியா, ஜிந்தால் ஸ்டீல் உள்ளிட்ட, 12 நிறுவனப் பங்குகளின் விலை சரிவு அடைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 44.60 புள்ளிகள் உயர்ந்து, 6,094.75 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,105.30 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,045.60 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|