நெல் பயிரிடும் பரப்பளவு குறைந்ததுநெல் பயிரிடும் பரப்பளவு குறைந்தது ... நாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு 206 கோடி டாலர் சரிவு நாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு 206 கோடி டாலர் சரிவு ...
வர்த்தகம் » ஜவுளி
ஆடைகள் சந்தை ரூ.2.75 லட்சம் கோடியாக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2013
00:23

மும்பை:இந்திய ஆயத்த ஆடைகள் சந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளில், ஆண்டுக்கு, 8 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு, 2.75 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, தரக் குறியீட்டு நிறுவனமான "கேர்' தெரிவித்துள்ளது.சந்தை மதிப்பு:கடந்த 2006-07ம் நிதியாண்டில், ஆயத்த ஆடைகளுக்கான சந்தை மதிப்பு, 1.26 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, 2011-12ம் நிதியாண்டில், ஒட்டு மொத்த அளவில், ஆண்டுக்கு, 10 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு, 2.03 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது.
இந்நிலையில், உள்நாடு மற்றும் சர்வதேச சுணக்க நிலையால், கடந்த 2012-13ம் நிதியாண்டில், இத்துறையின் சந்தை மதிப்பு வளர்ச்சி, 4.5 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்பட்டது.இருப்பினும், தற்போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி இயல்பு நிலைக்கு திரும்பி வருவதுடன், தனிநபர் செலவிடும் வருவாயும் அதிகரித்து வருகிறது. எனவே, இந்திய ஆடைகள் துறையின் சந்தை மதிப்பு, அடுத்த மூன்று ஆண்டுகளில், 2.75 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என, "கேர்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஊக்குவிப்பு திட்டங்கள்:மத்திய அரசு, ஜவுளி துறையை மேம்படுத்தும் வகையில், பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக, நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, 2 சதவீத வட்டி மானியம் தொடரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச அளவிலும், பல நாடுகளின் பொருளாதாரம் மேம்படத் துவங்கிஉள்ளது. இதனால், ஆயத்த ஆடைகளுக்கான தேவை அதிகரித்து, இத்துறை வளர்ச்சி காணும் என, "கேர்' நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)