பதிவு செய்த நாள்
13 மே2013
00:29
மும்பை:இந்தியாவில், புற்று நோய்க்கான மருந்து சந்தை, ஒட்டு மொத்த அளவில் ஆண்டிற்கு, 15.46 சதவீதம் வளர்ச்சி கண்டு, வரும், 2017ம் ஆண்டிற்குள், 3,831 கோடி ரூபாயாக அதிகரிக்கும். தற்போதைய நிலையில், இந்த சந்தையின் வளர்ச்சி, 20 சதவீதம் என்ற அளவில் உள்ளது என, ப்ராஸ்ட் அண்டு சுல்லிவன் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்தியாவில், பல வகையான புற்று நோய்களால், 28 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆண்டுதோறும் சராசரியாக, 8 லட்சம் பேர் புற்று நோய் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக, ஆண்களை விட, பெண்களே இத்தகைய பாதிப்பிற்கு அதிகளவில் ஆளாகி வருகின்றனர் என, ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. ஆண்கள், வாய் மற்றும் நுரையீரல் புற்று நோயாலும், பெண்கள், கருப்பை மற்றும் மார்பக புற்று நோயாலும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோய் காரணமாக இறப்போரில், 50 சதவீதம் பேர் பெண்களாவர்.புற்றுநோய்க்கு, பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. அவற்றில் ஒன்றான, கீமோ தெரபி சிகிச்சையின் சந்தை மதிப்பு, சென்ற 2012ம் ஆண்டில், மிக அதிக அதிகளவாக, 700 கோடி ரூபாயாக இருந்தது என, ஆய்வு நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|