பதிவு செய்த நாள்
13 மே2013
00:39
மும்பை:நடப்பு 2013-14ம் நிதியாண்டில், இயற்கை ரப்பர் இறக்குமதி, 17 சதவீதம் குறைந்து, 1.80 லட்சம் டன்னாக சரிவடையும் என, ரப்பர் வாரியம் மதிப்பிட்டுள்ளது.உள்நாட்டில், டயர் நிறுவனங்களிடம் அதிக அளவில், ரப்பர் தேக்கம் கண்டுஇருப்பது, கார் விற்பனையில் ஏற்பட்டு உள்ள சரிவு போன்றவற்றால், ரப்பருக்கான தேவை குறைந்து, அதன் இறக்குமதி சரிவடையும் என, தெரிகிறது.சென்ற 2012-13ம் நிதியாண்டில், இயற்கை ரப்பர் இறக்குமதி, இதுவரை இல்லாத அளவாக, 2.17 லட்சம் டன்னாக உயர்ந்திருந்தது.
நாட்டில் உற்பத்தியாகும் பெரும்பாலான இயற்கை ரப்பரை, டயர் தயாரிப்பு நிறுவனங்கள் கொள்முதல் செய்து கொள்கின்றன. எனினும், வாகன விற்பனை சரிவடைந்துள்ளதால், கடந்த ஆண்டு நவம்பர் முதல் டயர் நிறுவனங்களுக்கான இயற்கை ரப்பர் தேவை குறைந்துள்ளது.சென்ற நிதியாண்டில், கார் விற்பனை, 6.69 சதவீதம் குறைந்து உள்ளது. நடப்பு நிதியாண்டிலும், இந்த சரிவு தொடர்கிறது.சென்ற ஏப்ரலில், பயணிகள் கார் விற்பனை, 10.43 சதவீதம் சரிவடைந்து, 1,20,789 ஆக குறைந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே மாதத்தில், 1,68,354 ஆக உயர்ந்திருந்தது என, இந்திய மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ( சியாம்) தெரிவித்துள்ளது.நடப்பு ஆண்டில், நாட்டின் ரப்பர் உற்பத்தி, 9.60 லட்சம் டன்னாக இருக்கும் என, ரப்பர் வாரியம் மதிப்பிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|