இயற்கை ரப்பர் இறக்குமதி1.80 லட்சம் டன்னாக குறையும்இயற்கை ரப்பர் இறக்குமதி1.80 லட்சம் டன்னாக குறையும் ... அஞ்சல் துறை வங்கி துவங்க நிதி அமைச்சகம் எதிர்ப்பு அஞ்சல் துறை வங்கி துவங்க நிதி அமைச்சகம் எதிர்ப்பு ...
உருக்கு, அலுமினியம் கழிவுஇறக்குமதிக்கு சுங்க வரி விதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2013
00:40

புதுடில்லி:மத்திய அரசு, உருக்கு, அலுமினியம், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஆகியவற்றின் கழிவுகளுக்கு, 2.5 சதவீதம் இறக்குமதி வரி விதித்துள்ளது. மேலும், பித்தளை கழிவுகள் மீதான சிறப்பு கூடுதல் சுங்க வரி விலக்குச் சலுகை, திரும்பப் பெறப்பட்டுள்ளது. நடவடிக்கை:பொதுநலன் கருதி, இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2003ம் ஆண்டு முதல், இறக்குமதியாகும் உருக்கு கழிவுகளுக்கு வரி விதிக்கப்படுவதில்லை. கடந்த 2011ம் ஆண்டு பட்ஜெட்டில், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கழிவு மீதான இறக்குமதி வரியும் நீக்கப்பட்டது.இந்நிலையில், உருக்கு மற்றும் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் கழிவுகள் மீது விதிக்கப்பட்டுள்ள சுங்க வரியை திரும்பப் பெற வேண்டும் என, உருக்குத் துறை வலியுறுத்தியுள்ளது.வரி விதிப்பால், உருக்கு பொருள்களின் விலை அதிகரித்து, நுகர்வோர் பாதிக்கப்படுவர் என, உருக்குத் துறையினர் தெரிவித்துள்ளனர்.இறக்குமதி வரி காரணமாக, உருக்கு கழிவின் விலை, டன்னுக்கு, 600 - 700 ரூபாய் வரை அதிகரிக்கும். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் விலை, 1 டன்னுக்கு 2,500 ரூபாய் வரை உயரும்.பித்தளை கழிவு:அதே சமயம், இந்த வரி விதிப்பால், மத்திய அரசுக்கு, 500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பித்தளை கழிவை பொறுத்தவரை, அதன் இறக்குமதிக்கு, இனி, 4 சதவீத, சிறப்பு கூடுதல் வரி செலுத்த வேண்டும். இதனால், பித்தளை பொருட்கள் விலை உயரும் என, இத்துறையினர் தெரிவித்தனர்.இந்தியா, ஓராண்டில், சராசரியாக, 70 லட்சம் டன் உருக்கு மற்றும் 10 - 20 லட்சம் டன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கழிவுகளை இறக்குமதி செய்து வருகிறது.நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்கள், உருக்கு கழிவை அதிக அளவில் பயன்படுத்தி, உருக்கு பொருள்களை தயாரிக்கின்றன. இந்தியாவின் ஒட்டுமொத்த உருக்கு உற்பத்தியில் (3.20 கோடி டன்), சிறிய, நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பு, 40 சதவீதமாக உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)