பதிவு செய்த நாள்
13 மே2013
11:32
சென்னை : அட்சய திரிதியான இன்று(மே 13ம் தேதி) தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்துள்ளது. இன்று, அட்சய திரிதியை. இந்நாளில், தங்கம் வாங்குவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. கடந்தாண்டு, தங்கத்தின் விலை அதிகம் இருந்ததால், நகைக் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. தற்போது, தங்கத்தின் விலை, கடந்த ஒரு மாதமாக, சவரனுக்கு, 4,000 ரூபாய் வரை குறைந்து இருப்பதால், பொதுமக்களிடம், அதிக மகிழ்ச்சியை பார்க்க முடிகிறது. நகைக் கடைகளில் நேற்று முதல், மக்கள் கூட்டம் அலை மோதியது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்துள்ளது. சென்னை தங்க மார்க்கெட்டில் மாலைநேர நிலவரப்படி இன்று(மே 13ம் தேதி, திங்கட்கிழமை) ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.2,540-க்கும், சவரன் ரூ.20,320-க்கும், 24காரட் சுத்த தங்கத்தின் விலை, 10கிராம் ரூ.27,170-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியை பொறுத்தமட்டில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.48.30-க்கும், பார்வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.45,095-க்கும் விற்பனையாகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|