பதிவு செய்த நாள்
13 மே2013
17:21
மும்பை : கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய பங்குசந்தைகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன. மும்பை பங்குசந்தை 431 புள்ளிகளும், தேசிய பங்குசந்தை 127 புள்ளிகள் சரிந்தன. வாரத்தின் முதல்நாளான இன்று(மே 13ம் தேதி, திங்கட்கிழமை) காலையில் 70 புள்ளிகள் சரிவுடன் ஆரம்பித்த இந்திய பங்குசந்தைகள், ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குசந்தைகளில் காணப்பட்ட சரிவு மற்றும் பங்குமுதலீட்டாளர்கள் லாப நோக்கோடு, அதிகளவு நுகர்பொருட்கள் பங்குகளை விற்பனை செய்ததால் இன்றைய வர்த்தகம் பெரும் சரிவை சந்தித்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் குறியீடு 430.65 புள்ளிகள் சரிந்து 19,691.67 எனும் அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 126.80 புள்ளிகள் சரிந்து 5,980.45 எனும் அளவிலும் முடிந்தன. கடந்த 14 மாதங்களுக்கு பிறகு இந்திய பங்குசந்தைகள் இன்று தான் பெரும் சரிவை சந்தித்துள்ளன.
இன்றைய வர்த்தகத்தில் ஐ.டி.சி. பங்குகள் விலை 5.31 சதவீதமும், டி.சி.எஸ். பங்குகள் விலை 2.42 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் பங்குகள் விலை 3.27 சதவீதமும், எல்.அண்ட்.டி பங்குகள் விலை 2.96 சதவீதமும், ஏர்டெல் பங்குகள் விலை 4.14 சதவீதமும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் விலை 1.27 சதவீதமும், இன்போசிஸ் பங்குகள் விலை 0.92 சதவீதமும் சரிந்து காணப்பட்டன. இவைகள் தவிர அநேக நுகர்பொருள் பங்குகளின் விலையும் சரிவிலேயே முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|