பதிவு செய்த நாள்
14 மே2013
10:21
மும்பை : வாரத்தின் இரண்டாம் நாளான இன்று(மே 14ம் தேதி, செவ்வாய்கிழமை), இந்திய பங்குசந்தைகள் ஏற்றுத்துடன் துவங்கி இருக்கிறது. நேற்று(மே 13ம்தேதி) 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குசந்தைகள் இன்று காலையில் ஏற்றம் கண்டன. வர்த்தநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் குறியீடு 66.27 புள்ளிகள் உயர்ந்து 19,757.94 எனும் அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 15.35 புள்ளிகள் உயர்ந்து 5,995.80 எனும் அளவிலும் இருந்தது.
ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் ஏற்றம், அதன் எதிரொலியாக இந்திய பங்குசந்தைகளில் சில குறிப்பிட்ட பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் வாங்குவதாலும் இந்த ஏற்றம் இருப்பதாக சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் பிற பங்குசந்தைகளான ஜப்பானின் நிக்கி 0.09 சதவீதமும், ஹாங்காங்கின் ஹேங்சாங் 0.03 சதவீதமும் உயர்ந்து காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|