பதிவு செய்த நாள்
14 மே2013
16:51
மும்பை : வாரத்தின் இரண்டாம் நாளான இன்று(மே 14ம் தேதி, செவ்வாய்கிழமை) ஏற்றத்துடன் ஆரம்பித்த இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடனேயே முடிந்தன. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நாட்டின் பணவீக்கம் 4.89 சதவீதமாக சரிந்தது, முதலீட்டாளர் மத்தியில் வங்கி மற்றும் ஹெல்த்கேர் தொடர்பான பங்குகள் அதிகளவில் வாங்கப்பட்டது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் குறியீடு 30.62 புள்ளிகள் உயர்ந்து 19,722.29 எனும் அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 14.95 புள்ளிகள் உயர்ந்து 5,995.40 எனும் அளவிலும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸை அளவிட உதவும் 30 பங்குகளின் விலையில் 15 பங்குகள் விலை ஏற்றமும், 15 பங்குகள் விலை சரிந்தும் காணப்பட்டன. குறிப்பாக சன்பார்மா பங்குகள் 2.03 சதவீதமும், ஓஎன்ஜிசி மற்றும் ஏர்டெல் பங்குகள் 1.78 சதவீதம் லாபம் பெற்றன. இவைகள் தவிர்த்து எஸ்பிஐ., எச்டிஎப்சி மற்றும் ஹெல்த்கேர் தொடர்பான பங்குகளும் லாபம் பெற்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|