கைவினை பொருட்கள் ஏற்றுமதி13 சதவீதம் வளர்ச்சிகைவினை பொருட்கள் ஏற்றுமதி13 சதவீதம் வளர்ச்சி ... 348 மருந்துகள் விலை விரைவில் குறையும் 348 மருந்துகள் விலை விரைவில் குறையும் ...
அலைபேசி வாடிக்கையாளர் 66.44 கோடியாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2013
02:00

புதுடில்லி: சென்ற ஏப்ரல் மாதத்தில், ஜி.எஸ்.எம்., அலைபேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை, 66.44 கோடியாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய மார்ச் மாதத்தில், 66.09 கோடியாக இருந்தது. ஆக, ஏப்ரல் மாதத்தில் மட்டும், நாடு தழுவிய அளவில், ஜி.எஸ்.எம்., வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 35 லட்சம் அதிகரித்துள்ளது என, இந்திய அலைபேசி சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
வோடபோன் நிறுவனம்:அலைபேசி சேவை துறையில் ஈடுபட்டு வரும் பல நிறுவனங்கள், "பிரிப்பெய்டு' பிரிவில் நீண்ட காலம் பயன்படுத்தாத இணைப்புகளை நீக்கியுள்ளன. மேலும், நகர்புறங்களில், அலைபேசி சேவை, உச்சகட்ட நிலையை எட்டியுள்ளது. இந்நிலையிலும், சென்ற ஏப்ரல் மாதத்தில், அதிக எண்ணிக்கையில், புதிதாக அலைபேசி வாடிக்கையாளர்கள் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற ஏப்ரலில், வோடபோன் நிறுவனம், மிக அதிகபட்சமாக, 14.20 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்து கொண்டுள்ளது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 15.37 கோடியாக அதிகரித்துள்ளது.வீடியோகான் மொபைல் சர்வீசஸ் நிறுவனம், மீண்டும் அலைபேசி வர்த்தகத்தில் ஈடுபடத் துவங்கியுள்ளது. இதையடுத்து, சென்ற ஏப்ரலில் மட்டும், இந்நிறுவனம், அதிகபட்சமாக, 6.49 சதவீதம் அல்லது 1.30 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்து கொண்டுள்ளது.
பார்தி ஏர்டெல்:ஜி.எஸ்.எம்., அலைபேசி சேவையில் தொடர்ந்து முதலிடம் வகித்து வரும், பார்தி ஏர்டெல் நிறுவனம், சென்ற ஏப்ரல் மாதத்தில், புதிதாக, 6 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்து கொண்டுள்ளது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 18.80 கோடியாக அதிகரித்துள்ளது. செல்போன் சேவை துறையில், இந்நிறுவனம், 28.41 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது.
ஐடியா செல்லுலார் நிறுவனம், 12.80 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்து கொண்டு உள்ளது. இதையடுத்து, சென்ற ஏப்ரல் மாத இறுதியில், இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 12.28 கோடியாக உயர்ந்துள்ளது.பொதுத் துறையைச் சேர்ந்த, பீ.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி, 9.71 கோடியாக இருந்தது.
மற்றொரு பொதுத் துறை நிறுவனமான, எம்.டி.என்.எல்., சென்ற ஏப்ரல் மாதத்தில், 1 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து உள்ளது. இதையடுத்து, இதன் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 47.19 லட்சமாக சரிவடைந்துள்ளது.கணக்கீட்டு மாதத்தில், ஏர்செல் நிறுவனம், 8,249 புதிய வாடிக்கையாளர்களை இணைத்து கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின், மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 6 கோடியாக உயர்ந்துள்ளது.
யூனிநார் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 1.63 லட்சம் அதிகரித்து, 3.18 கோடியாக உயர்ந்துள்ளது என, இந்திய அலைபேசி சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு மேலும் தெரிவித்து உள்ளது.
கட்டண உயர்வு:இந்நிலையில், தொலைத் தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும், பல நிறுவனங்கள், கடந்த நான்கு மாதங்களில் அலைபேசி சேவை கட்டணங்களை உயர்த்தியுள்ளன.இதையடுத்து, வாடிக்கையாளர் ஒருவர், ஜி.எஸ்.எம்., தொழில்நுட்ப அலைபேசியில், பேசுவது, மாதாந்திர அடிப்படையில் சராசரியாக, 359 நிமிடங்களாக குறைந்து போயுள்ளது. இது, கடந்த 2006ம் ஆண்டில், 505 நிமிடங்களாக அதிகரித்து காணப்பட்டது.
இதே போன்று, சி.டீ.எம்.ஏ., அலைபேசி சேவைப் பிரிவின், மாதாந்திர அலைபேசி பயன்பாடும் சராசரியாக, 550 நிமிடங்கள் என்ற அளவிலிருந்து, 230 நிமிடங்களாக குறைந்து போயுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)