பதிவு செய்த நாள்
19 மே2013
00:36
புதுடில்லி:நடப்பாண்டில் இது வரையிலுமாக, நாட்டின் நெல் பயிரிடும் பரப்பளவு, 5.14 சதவீதம் சரிவடைந்து, 2.40 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில், 2.53 லட்சம் ஹெக்டேராக அதிகரித்து காணப்பட்டது.மதிப்பீட்டு காலத்தில், அசாம், ஒடிசா ஆகிய மாநிலங்களில், நெல் விதைப்பு பணிகள் தாமதமானதை அடுத்து, ஒட்டு மொத்த அளவில், இதன் பயிரிடும் பரப்பளவு சரிவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.இதே காலத்தில், கரும்பு பயிரிடும் பரப்பளவும், 45.74 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 40.74 லட்சம் ஹெக்டேராக சரிவடைந்துள்ளது. தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், பயிரிடும் பரப்பளவு குறைந்து போனதே இதற்கு காரணம்.இதே போன்று, பருத்தி பயிரிடும் பரப்பளவும், 7.22 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 7.13 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|