ஆறாவது பொருளாதார கணக்கெடுப்பு துவக்கம்:வருமானத்தை தெரிவிக்க அவசியமில்லைஆறாவது பொருளாதார கணக்கெடுப்பு துவக்கம்:வருமானத்தை தெரிவிக்க ... ... 95 ஆயிரம் "டிவி'க்கள் வினியோகிக்காமல் முடக்கம்:பழுதானதை மாற்றாததும் அம்பலம் 95 ஆயிரம் "டிவி'க்கள் வினியோகிக்காமல் முடக்கம்:பழுதானதை மாற்றாததும் ... ...
விவசாயிகளின் மனுக்களைபரிசீலிக்காததால் ரூ.53 கோடி முடக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2013
00:52

நிதியுதவி கோரிய மனுக்களை, வருவாய்த் துறை உரிய காலத்தில் தீர்வு செய்யாததால், வேளாண் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய, 53.39 கோடி ரூபாய், ஆறு ஆண்டுகள் வரை செலவிடப்படாமல் முடங்கியுள்ளது.வேளாண் தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் வகையில், தமிழ்நாடு வேளாண் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத் திட்டத்தை, அரசு அறிமுகம் செய்தது. விபத்து, மரணம், பகுதி உடல் செயல் இழப்பு, இறுதிச் சடங்கு செலவினங்களுக்கு, இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டம், நில சீர்திருத்த ஆணையரால் செயல்படுத்தப்பட்டு வந்தது. 2011ல், இந்த திட்டம், முதல்வரின் விவசாயிகள் சமூக பாதுகாப்புத் திட்டமாக மாற்றி, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, 2001 முதல் 2012 வரை, தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட, 24.40 லட்சம் மனுக்களில், 21.31 லட்சம் மனுக்கள் மட்டுமே பரிசீலிக்கப்பட்டு, 1,884.89 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.கடந்த, 2001, 2005, 2006ம் ஆண்டுகளில், 14.40 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, 65,609 மனுக்கள் முடிவு எடுக்காமலும், 1.13 லட்சம் மனுக்கள் பரிசீலனைக்கு எடுக்காமலும் விடப்பட்டுள்ளன.இதன்படி, 31 மாவட்டங்களிலும், வேளாண் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய, 53.39 கோடி ரூபாய், ஆறு ஆண்டுகள் வரை செலவிடாமல் உள்ளதை, மத்திய தணிக்கைத்துறை அதன் ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)