பதிவு செய்த நாள்
20 மே2013
00:52
நிதியுதவி கோரிய மனுக்களை, வருவாய்த் துறை உரிய காலத்தில் தீர்வு செய்யாததால், வேளாண் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய, 53.39 கோடி ரூபாய், ஆறு ஆண்டுகள் வரை செலவிடப்படாமல் முடங்கியுள்ளது.வேளாண் தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் வகையில், தமிழ்நாடு வேளாண் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத் திட்டத்தை, அரசு அறிமுகம் செய்தது. விபத்து, மரணம், பகுதி உடல் செயல் இழப்பு, இறுதிச் சடங்கு செலவினங்களுக்கு, இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டம், நில சீர்திருத்த ஆணையரால் செயல்படுத்தப்பட்டு வந்தது. 2011ல், இந்த திட்டம், முதல்வரின் விவசாயிகள் சமூக பாதுகாப்புத் திட்டமாக மாற்றி, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, 2001 முதல் 2012 வரை, தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட, 24.40 லட்சம் மனுக்களில், 21.31 லட்சம் மனுக்கள் மட்டுமே பரிசீலிக்கப்பட்டு, 1,884.89 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.கடந்த, 2001, 2005, 2006ம் ஆண்டுகளில், 14.40 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, 65,609 மனுக்கள் முடிவு எடுக்காமலும், 1.13 லட்சம் மனுக்கள் பரிசீலனைக்கு எடுக்காமலும் விடப்பட்டுள்ளன.இதன்படி, 31 மாவட்டங்களிலும், வேளாண் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய, 53.39 கோடி ரூபாய், ஆறு ஆண்டுகள் வரை செலவிடாமல் உள்ளதை, மத்திய தணிக்கைத்துறை அதன் ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|