95 ஆயிரம் "டிவி'க்கள் வினியோகிக்காமல் முடக்கம்:பழுதானதை மாற்றாததும் அம்பலம்95 ஆயிரம் "டிவி'க்கள் வினியோகிக்காமல் முடக்கம்:பழுதானதை மாற்றாததும் ... ... சென்செக்ஸ் 138 புள்ளிகள் ஏற்றத்தில் முடிந்தது வர்த்தகம் சென்செக்ஸ் 138 புள்ளிகள் ஏற்றத்தில் முடிந்தது வர்த்தகம் ...
ஏற்றுமதியை மேம்படுத்தவெளியுறவு அமைச்சகம் திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2013
00:55

புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதியை மேம்படுத்த, வெளிநாடுகளில் உள்ள இந்திய துணை தூதரங்கள் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.சர்வதேச பொருளாதார மந்தநிலையால், சென்ற 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி, 1.76 சதவீதம் சரிவடைந்து, 30,060 கோடி டாலராக வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 19,091 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
இதையடுத்து, நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்து, பொருளாதார உறவுகள் துறை செயலர் பினக் ரஞ்சன் சக்ரவர்த்தி தலைமையில், டில்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில், 26 ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு, "அசோசெம்' உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்: வெளிநாடுகளில் உள்ள இந்திய துணை தூதரங்களின் உதவியுடன், அந்தந்த நாடுகளில், குறிப்பிட்ட துறையில் உள்ள வர்த்தக வாய்ப்பு, முதலீடுகளுக்கான தேவை போன்ற விவரங்கள் சேகரிக்கப்படும். இது போன்று, ஒவ்வொரு துறையிலும் ஏற்றுமதி வாய்ப்புகள் கண்டறியப்பட்டு, அதற்கேற்ப, ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)