பதிவு செய்த நாள்
20 மே2013
00:55
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதியை மேம்படுத்த, வெளிநாடுகளில் உள்ள இந்திய துணை தூதரங்கள் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.சர்வதேச பொருளாதார மந்தநிலையால், சென்ற 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி, 1.76 சதவீதம் சரிவடைந்து, 30,060 கோடி டாலராக வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 19,091 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
இதையடுத்து, நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்து, பொருளாதார உறவுகள் துறை செயலர் பினக் ரஞ்சன் சக்ரவர்த்தி தலைமையில், டில்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில், 26 ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு, "அசோசெம்' உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்: வெளிநாடுகளில் உள்ள இந்திய துணை தூதரங்களின் உதவியுடன், அந்தந்த நாடுகளில், குறிப்பிட்ட துறையில் உள்ள வர்த்தக வாய்ப்பு, முதலீடுகளுக்கான தேவை போன்ற விவரங்கள் சேகரிக்கப்படும். இது போன்று, ஒவ்வொரு துறையிலும் ஏற்றுமதி வாய்ப்புகள் கண்டறியப்பட்டு, அதற்கேற்ப, ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|