பதிவு செய்த நாள்
20 மே2013
00:58
உள்நாட்டில், கச்சா சணல் விலை, 10 சதவீதம் சரிவடைய வாய்ப்புள்ளதாக, மத்திய வேளாண் அமைச்சகத்தின் முன்கூட்டிய மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்ற 2012-13ம் நிதியாண்டில், கச்சா சணல் உற்பத்தி, 5 சதவீதம் குறைந்து, 1.06 கோடி பொதிகளாக (ஒரு பொதி-170 கிலோ) சரிவடையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டில், கச்சா சணல் உற்பத்தி, 1.12 கோடி பொதிகளாகவும், கையிருப்பை உள்ளடக்கிய சந்தை வரத்து, 1.35 கோடி பொதிகளாகவும் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம்: எனினும், அசாம், பீகார் மற்றும் மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதிகளில், பருவ மழை தவறியதால், சணல் உற்பத்தி குறித்த மதிப்பீடு மாறும் வாய்ப்பு உள்ளதாக, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது."தற்போது, ஒரு குவிண்டால் கச்சா சணல் விலை, 3,000 ரூபாயாக உள்ளது. சந்தையில் வரத்து அதிகரிக்கும்போது, இந்த விலையில், 10 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது' என, இந்திய சணல் ஆலைகள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் சஞ்சய் கஜாரியா தெரிவித்தார்.பட்ஜ் ஜூட் மில் நிறுவனத்தின் இயக்குனர், மணிஷ் பொடார் கூறும்போது, "கச்சா சணல் உற்பத்தி, 5 சதவீதம் குறைந்தால் கூட, அதற்கான தேவை, ஒரே சீராக இல்லாத நிலையில், சணல் ஆலைகளுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு இருக்காது' என்று தெரிவித்தார்.தற்போது, கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, ஒரு குவிண்டாலுக்கு 2,300 ரூபாய் என்ற அளவில் உள்ளது.
இந்த விலையை விட, 700 ரூபாய் கூடுதலாக, கச்சா சணல் விற்பனை செய்யப்படுகிறது.@தவை:தேவையை பொறுத்தே, கச்சா சணல் விலை நிலவரம் இருக்கும் என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.சென்ற ஆண்டு, நாட்டில் 4.26 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில், சணல் பயிரிடப்பட்டது. நடப்பு ஆண்டில், 37 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு குறைந்து, 3.89 லட்சம் ஹெக்டேர் என்ற அளவிற்கே, சணல் பயிரிடப்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த, 2009ம் ஆண்டு முதல், 2012ம் ஆண்டு வரை, கச்சா சணல் கையிருப்பு, 31 லட்சம் பொதிகள் என்ற அளவில் இருந்தது. இதன் காரணமாக, சணல் விலை உயர்வு தவிர்க்கப்பட்டுள்ளது.இது தவிர, கச்சா சணல் இறக்குமதி காரணமாகவும், அதன் விலை கட்டுக்குள் உள்ளது. கடந்த 2009-10ம் நிதியாண்டில், வங்க தேசத்தில் இருந்து, 3 லட்சம் கச்சா சணல் பொதிகள் இறக்குமதி செய்யப்பட்டன. இது, சென்ற 2012-13ம் நிதியாண்டில், 9 லட்சம் பொதிகளாக உயர்ந்துள்ளது.
இதே காலத்தில், ஆலைகளிடம் இருந்த கையிருப்பு சணலும், இதே அளவிற்கு உயர்ந்தது. இதனால், ஆலைகளின், கச்சா சணல் கொள்முதல் குறைந்துள்ளது.கடந்த 2009ம் ஆண்டு, ஆலைகளின் கச்சா சணல் பயன்பாடு, 77 லட்சம் பொதிகளாக இருந்தது. இது, 2012ம் ஆண்டு, 92 லட்சம் பொதிகளாக உயர்ந்தது. அதே சமயம், இதே காலத்தில், ஆலைகளுக்கான, கச்சா சணல் சப்ளை, முறையே 1.08 கோடி பொதிகள் என்ற அளவில் இருந்து, 1.32 கோடி பொதிகளாக அதிகரித்து உள்ளது.இறக்குமதி:வங்கதேசத்தின் கச்சா சணல், உயர்ந்த தரத்தில் உள்ளது. இதன் காரணமாக, அந்நாட்டில் இருந்து கச்சா சணலை இறக்குமதி செய்ய, சணல் ஆலோசனை வாரியம் (ஜே.ஏ.பீ.,) பரிந்துரை செய்துள்ளது.
இதையடுத்து, நடப்பாண்டில், வங்கதேசத்தில் இருந்து 9,60 லட்சம் கச்சா சணல் பொதிகள் இறக்குமதியாகும் என, சணல் ஆலோசனை வாரியம் மறு மதிப்பீடு செய்துள்ளது.முந்தைய மதிப்பீட்டில், 8 லட்சம் கச்சா சணல் பொதிகள் இறக்குமதியாகும் என, ஜே.ஏ.பீ.,தெரிவித்திருந்தது.உயர் தரமான கச்சா சணலை இறக்குமதி செய்வதன் மூலம், இந்திய தயாரிப்பாளர்கள், சிறப்பு வகை தரை விரிப்புகளுக்கான இழைகள் மற்றும் இதர மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய முடியும் என, ஜே.ஏ.பீ., @மலும், தெரிவித்துள்ளது.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|