பதிவு செய்த நாள்
21 மே2013
01:19
சென்னை:கும்பகோணத்தில், தலைமை அலுவலகத்தை கொண்டு செயல்பட்டு வரும், சிட்டி யூனியன் பேங்க், சென்ற, 2012-13ம் நிதியாண்டில், 322 கோடி ரூபாயை, நிகர லாபமாக ஈட்டியுள்ளது.இது, முந்தைய நிதியாண்டை (280 கோடி ரூபாய்) விட, 15 சதவீதம் அதிகம் என, இவ்வங்கியின் நிர்வாக இயக்குனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான என்.காமகோடி தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:கடந்த நிதியாண்டில், வங்கியின் மொத்த வர்த்தகம், 25 சதவீதம் வளர்ச்சி கண்டு, 35,648 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
இதில், திரட்டப்பட்ட டெபாசிட், 24 சதவீதம் உயர்ந்து, 20,305 கோடி ரூபாயாகவும், வழங்கப்பட்ட கடன்கள், 25 சதவீதம் உயர்ந்து, 15,343 கோடி ரூபாயாகவும் அதிகரித்து உள்ளது.சென்ற நிதியாண்டில், வங்கியின் மொத்த வருவாய், 29 சதவீதம் உயர்ந்து, 1,904 கோடியிலிருந்து, 2,462 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. கணக்கீட்டு நிதியாண்டில், வங்கியின் இதர வருவாய், 32 சதவீதம் உயர்ந்து, 274 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.வங்கி, சென்ற நிதியாண்டில், புதிதாக, 72 கிளைகளையும், 290 ஏ.டி.எம்.,களையும் துவங்கியுள்ளது. இதையடுத்து, வங்கியின் மொத்த கிளைகளின் எண்ணிக்கை, 375 ஆகவும், ஏ.டி.எம்.,களின் எண்ணிக்கை, 790 ஆகவும் உயர்ந்துள்ளன.வங்கி, சென்ற நிதியாண்டிற்கு, அதன் பங்குதாரர்களுக்கு, 100 சதவீத இடைக்கால டிவிடெண்டை அறிவித்துள்ளது.இவ்வாறு, காமகோடி தெரிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|