அலுமினியம் விலை மேலும் சரிவடைய வாய்ப்பு:இருப்பு உயர்ந்து, தேவை குறைந்ததால்...அலுமினியம் விலை மேலும் சரிவடைய வாய்ப்பு:இருப்பு உயர்ந்து, தேவை ... ... அன்னிய முதலீட்டை எதிர்க்கும் மாநிலங்களில்"வால்மார்ட்' கிடங்கு திறக்க மத்திய அரசு அனுமதி அன்னிய முதலீட்டை எதிர்க்கும் மாநிலங்களில்"வால்மார்ட்' கிடங்கு திறக்க ... ...
நிலக்கரிக்கான பற்றாக்குறை20 கோடி டன்னாக அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2013
01:29

ஐதராபாத்:நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தின் இறுதியில், நாட்டின் நிலக்கரிக்கான பற்றாக்குறை, 20 கோடி டன்னாக அதிகரிக்கும் என, மத்திய திட்டக் குழுவின் எரிசக்தி ஆலோசகர் ஐ.ஏ.கான் ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது தெரிவித்தார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:நாட்டின் நிலக்கரி உற்பத்தியை உயர்த்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 2011-12ம் நிதியாண்டில், இந்தியாவில் நிலக்கரிக்கான தேவை, 64 கோடி டன்னாக இருந்தது. இது, நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தின்
இறுதியில் (2012-17), 98 கோடி டன்னாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.அதேசமயம், அவ்வாண்டில், நாட்டின் நிலக்கரி உற்பத்தி, 79.50 கோடி டன்னாக இருக்கும். ஆக, இதற்கான பற்றாக்குறை, கிட்டத்தட்ட, 20 கோடி டன்னாக இருக்கும்.திட்டக்குழு, நாட்டின் எரிசக்தி உற்பத்தியை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை பரிசீலனை செய்துள்ளது. குறிப்பாக, மரபு சாரா எரிசக்தியை, அதிகரிக்க வேண்டும் என, ஆலோசனை தெரிவித்துள்ளது.
குறிப்பாக, நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், கூடுதலாக, 1.18 லட்சம் மெகா வாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது, கடந்த 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், 69,251 மெகா வாட்டாக இருந்தது. மரபு சாரா எரிசக்தி துறை வாயிலாக, நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், 30 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கடந்த 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், இப்பிரிவில், கூடுதலாக, 14,267 மெகா வாட் மின் உற்பத்தி சேர்க்கப்பட்டது.இவ்வாறு கான் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)