பதிவு செய்த நாள்
21 மே2013
01:29
ஐதராபாத்:நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தின் இறுதியில், நாட்டின் நிலக்கரிக்கான பற்றாக்குறை, 20 கோடி டன்னாக அதிகரிக்கும் என, மத்திய திட்டக் குழுவின் எரிசக்தி ஆலோசகர் ஐ.ஏ.கான் ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது தெரிவித்தார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:நாட்டின் நிலக்கரி உற்பத்தியை உயர்த்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 2011-12ம் நிதியாண்டில், இந்தியாவில் நிலக்கரிக்கான தேவை, 64 கோடி டன்னாக இருந்தது. இது, நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தின்
இறுதியில் (2012-17), 98 கோடி டன்னாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.அதேசமயம், அவ்வாண்டில், நாட்டின் நிலக்கரி உற்பத்தி, 79.50 கோடி டன்னாக இருக்கும். ஆக, இதற்கான பற்றாக்குறை, கிட்டத்தட்ட, 20 கோடி டன்னாக இருக்கும்.திட்டக்குழு, நாட்டின் எரிசக்தி உற்பத்தியை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை பரிசீலனை செய்துள்ளது. குறிப்பாக, மரபு சாரா எரிசக்தியை, அதிகரிக்க வேண்டும் என, ஆலோசனை தெரிவித்துள்ளது.
குறிப்பாக, நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், கூடுதலாக, 1.18 லட்சம் மெகா வாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது, கடந்த 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், 69,251 மெகா வாட்டாக இருந்தது. மரபு சாரா எரிசக்தி துறை வாயிலாக, நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், 30 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கடந்த 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், இப்பிரிவில், கூடுதலாக, 14,267 மெகா வாட் மின் உற்பத்தி சேர்க்கப்பட்டது.இவ்வாறு கான் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|