பதிவு செய்த நாள்
21 மே2013
01:30
புதுடில்லி:சில்லரை விற்பனையில், அன்னிய முதலீட்டை எதிர்க்கும் மாநிலங்களில், வால்மார்ட், டெஸ்கோ போன்ற அன்னிய நிறுவனங்கள், கிடங்குகளை அமைக்க தடையேதும் இல்லை என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.மத்திய அரசு, பன்முக பிராண்டுகளின் சில்லரை வணிகத்தில், 51 சதவீத அன்னிய முதலீட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது.இதற்கு தமிழகம், உத்தர பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
விளக்கம்:அமெரிக்காவைச் சேர்ந்த சில்லரை விற்பனை நிறுவனமான வால்மார்ட், இங்கிலாந்தின் டெஸ்கோ, சுவிடனின் ஐ.கே.இ.ஏ., உள்ளிட்ட சில நிறுவனங்கள், இந்திய சில்லரை வர்த்தகத்தில் தீவிரமாக களமிறங்க உள்ளன.எனினும், முதலீடு, கொள்முதல் குறித்த சில விதிமுறைகளில் விளக்கம் தேவை என, சில நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.இது தொடர்பாக, அண்மையில் டெஸ்கோ, டிரென்ட் ஆகிய நிறுவனங்களின் தலைவர்கள், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் ஆனந்த் சர்மாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.இதையடுத்து, மத்திய அரசின் தொழிற்கொள்கை மற்றும் மேம்பாடு (டீ.ஐ.பி.பி.,) அமைப்பைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர், செய்தி நிறுவனமொன்றுக்கு அளித்த தகவல்:மத்திய அரசு, பன்முக பிராண்டுகளின் சில்லரை விற்பனையில், அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்துள்ளது. எனினும், மாநிலங்களை பொறுத்தவரை, இதற்கு அனுமதி அளிப்பது, அவற்றின் விருப்பத்தை பொறுத்தது.அதே சமயம், சில்லரை விற்பனையில் அன்னிய முதலீட்டை எதிர்க்கும் மாநிலங் களில், வெளிநாட்டு நிறுவனங்கள், அவற்றின் கிடங்குகள், குளிர்பதன கிடங்குகளை அமைக்கலாம்.
மேலும், அம்மாநிலங்களில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களிடம் இருந்து, பல்வேறு பொருட்களை கொள்முதல் செய்யலாம்; வர்த்தகம் புரியலாம். இதை, எந்த மாநிலமும் தடை செய்ய முடியாது.சில்லரை விற்பனையில், அன்னிய முதலீட்டை எதிர்க்கும் மாநிலங்களில் உள்ள, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களிடம், பல்வேறு பொருட்களை வெளி நாட்டு நிறுவனங்கள் கொள்முதல் செய்வதற்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது.இந்தியாவில் சில்லரை விற்பனையில் கால்பதிக்க விரும்பும் அன்னிய நிறுவனங்கள், குறைந்தபட்சம், 10 கோடி டாலர் (550 கோடி ரூபாய்) முதலீடு செய்ய வேண்டும்.
öŒலவு:அதில், முதற்கட்டமாக, 50 சதவீதத்தை, பின்னணி வர்த்தக அடிப்படை வசதிகளுக்காக செலவிட வேண்டும். நிலம் வாங்கவோ, ஏற்கனவே உள்ள கட்டடத்தை வாங்கவோ, வாடகைக்கோ அத்தொகையை பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறை உள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.கடந்த, 19ம் தேதி பிப்ரவரி மாதம், சென்னை அருகே, வானகரத்தில், ஏழு ஏக்கர் பரப்பளவில் அனுமதியின்றிகட்டப்பட்டு வந்த வால்மார்ட் கிடங்கிற்கு, சி.எம்.டீ.ஏ., அதிகாரிகள், "சீல்' வைத்தனர்.இது, இந்தியாவில், பன்முக பிராண்டு சில்லரை விற்பனையில், அன்னிய நேரடி முதலீட்டை எதிர்த்து, முதன் முறையாக, ஒரு மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கை ஆகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|