பதிவு செய்த நாள்
21 மே2013
01:31
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் துவக்க தினமான திங்கட்கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், சில்லரை முதலீட்டாளர்கள், லாப நோக்கம் கருதி, அதிக எண்ணிக்கையில் பங்குகளை விற்பனை செய்ததால், இந்திய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தன.மேலும், ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.நேற்றைய வியாபாரத்தில், ஆரோக்கிய பராமரிப்பு, நுகர்வோர் சாதனங்கள், வங்கி, எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், குறைந்த விலைக்கு கைமாறின.
இருப்பினும், மோட்டார் வாகனம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு, ஓரளவிற்கு தேவை இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 62.14 புள்ளிகள் சரிவடைந்து, 20,223.98 புள்ளிகளில் நிலைபெற்றது.வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,443.62 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 20,186.66 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், பார்தி ஏர்டெல், ஓ.என்.ஜி.சி., சிப்லா உள்ளிட்ட, 18 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், மாருதி, மகிந்திரா, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட, 12 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 30.40 புள்ளிகள் குறைந்து, 6,156.90 புள்ளிகளில் நிலைகொண்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|