பதிவு செய்த நாள்
22 மே2013
00:09
புதுடில்லி:நடப்பாண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான, நான்கு மாத காலத்தில், உள்நாட்டில், விமான பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை, 202.89 லட்சமாக சரிவடைந்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 203.60 லட்சமாக அதிகரித்து காணப்பட்டது.
ஆக, மதிப்பீட்டு காலத்தில், உள்நாட்டில் விமான பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை, 0.35 சதவீதம் குறைந்துள்ளது.நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் மட்டும், விமான பயணிகள் எண்ணிக்கை, 50.77 லட்சமாக சரிவடைந்துள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 50.91 லட்சமாக அதிகரித்து காணப்பட்டது.
ஆக, மதிப்பீட்டு மாதத்தில், உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை, 0.27 சதவீதம் குறைந்துள்ளது.குறைந்த கட்டணத்தில் விமானச் சேவை வழங்கி வரும், இண்டிகோ நிறுவனம், 29.8 சதவீத சந்தை பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, ஜெட் ஏர்வேஸ்-ஜெட் லைட் (22.6 சதவீதம்), ஏர்-இந்தியா (19.2 சதவீதம்) மற்றும் கோ ஏர் (8.9 சதவீதம்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|