பதிவு செய்த நாள்
22 மே2013
00:11
புதுடில்லி:சரக்குகள் கையாண்டதன் வாயிலாக, இந்திய ரயில்வே ஈட்டிய வருவாய், சென்ற ஏப்ரல் மாதத்தில், 7,477 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மதிப்பீட்டு மாதத்தில், 4.30 கோடி டன் நிலக்கரி கையாண்டதன் வாயிலாக, ரயில்வேக்கு, 3,421 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
இது தவிர, உருக்கு ஆலைகள் மற்றும் இதர பயன்பாட்டிற்கு, 89 லட்சம் டன் இரும்புத் தாது கொண்டு சென்றதன் மூலம், 604 கோடி ரூபாயும், 93 லட்சம் டன் சிமென்ட் கையாண்டதன் வாயிலாக, 749 கோடி ரூபாயும், ரயில்வேக்கு வருவாய் கிடைத்துள்ளது.
கணக்கீட்டு மாதத்தில், 46 லட்சம் டன் உணவு தானியங்கள் கையாண்டதன் மூலம், 730 கோடி ரூபாயும், 33 லட்சம் டன் பெட்ரோலியப் பொருட்களை ஏற்றிச் சென்றதன் வாயிலாக, 426 கோடிரூபாயும், 27 லட்சம் டன் உருக்கு பொருட்களை கையாண்டதன் வாயிலாக, 435 கோடி ரூபாயும், ரயில்வேக்கு, வருவாய் கிடைத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|