பதிவு செய்த நாள்
22 மே2013
00:23
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய்கிழமையன்றும் அதிக ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்பட்டது. சர்வதேச நிலவரம் மற்றும் முதலீட்டாளர்கள், லாப நோக்கம் கருதி, அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்றவற்றால், இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தன.
ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.நேற்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட், வங்கி, மின்சாரம், மோட்டார் வாகனம் உள்ளிட்ட, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், குறைந்த விலைக்கு கைமாறின.இருப்பினும், நுகர்வோர் சாதனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை இருந்தது. இதனால் பங்கு வர்த்தகத்தின் சரிவு, ஓரளவிற்கு தடுத்து நிறுத்தப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 112.37 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 20,111.61 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,308.04 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 20,072.68 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், என்.டி.பி.சி., டாட்டா மோட்டார்ஸ் உள்ளிட்ட, 21 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், கோல் இந்தியா, பீ.எச்.இ.எல்., உள்ளிட்ட, 9 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 42.80 புள்ளிகள் சரிவடைந்து, 6,114.10 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 6,180.25 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 6,102.35 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|