பதிவு செய்த நாள்
22 மே2013
00:25
காரைக்குடி:மூலப்பொருட்களின் விலை குறைவால், உரங்களின் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது.கடந்த 2012ம் ஆண்டில், ஒரு மூட்டை டீ.ஏ.பி., மற்றும் பொட்டாஷ் உரங்களின் விலை முறையே, 1,252 மற்றும் 840 ரூபாயாக இருந்தது.கடும் வறட்சியாலும், விவசாய இடுபொருட்களின் விலை உயர்வாலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2013ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், உரங்களுக்கான மானியம் குறைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதனால், உரங்களின் விலை உயரும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது மூட்டைக்கு, 100 ரூபாய் வரை உரங்கள் விலை குறைந்து உள்ளது. கடந்த வாரம், 1,252 ரூபாய்க்கு விற்ற 50 கிலோ டீ.ஏ.பி., உரமூட்டை, தற்போது 1,130 ரூபாய்க்கும், 840 ரூபாய்க்கு விற்ற பொட்டாஷ் 790 ரூபாய்க்கும், 850 ரூபாய்க்கு விற்ற டி.ஏ.பி., மற்றும் யூரியா, பொட்டாஷ் கலந்த கலப்பு உரம், 750 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
மூட்டை, 270 ரூபாய்க்கு விற்ற யூரியா விலையில் மாற்றமில்லை.காரைக்குடி உரக்கடை உரிமையாளர் ஒருவர் கூறும்போது,"உரத்தின் முக்கிய மூலப்பொருளான பாஸ்போரிக் ஆசிட், சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில்இருந்து இறக்குமதியாகிறது. இவற்றின் விலையில், ஏற்பட்ட சரிவால், உரங்களின் விலை குறைந்துள் ளதாக, உர நிறுவனங்கள் தெரிவிக்கின்றன', என்றார்.
அமராவதிபுதூர் விவசாயி ஆறுமுகம் கூறுகையில், "பார்லிமென்ட் தேர்தலை மனதில் வைத்து, உரங்களின் விலையை குறைத்துள்ளனர். இப்போது, உரங் களை வாங்கி, இருப்பு வைத்து, விவசாய நேரத்தில் பயன்படுத்தினால், உரச் செலவு குறைய வாய்ப்புள்ளது, என்றார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|