பதிவு செய்த நாள்
22 மே2013
09:07
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (09.05 மணியளவின்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 26.31 புள்ளிகள் அதிகரித்து 20137.92 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 0.60 புள்ளிகள் அதிகரித்து 6114.70 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்று அதிக ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்பட்டது. சர்வதேச நிலவரம் மற்றும் முதலீட்டாளர்கள், லாப நோக்கம் கருதி, அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்றவற்றால், இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தன.
ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.நேற்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட், வங்கி, மின்சாரம், மோட்டார் வாகனம் உள்ளிட்ட, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், குறைந்த விலைக்கு கைமாறின.இருப்பினும், நுகர்வோர் சாதனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை இருந்தது. இதனால் பங்கு வர்த்தகத்தின் சரிவு, ஓரளவிற்கு தடுத்து நிறுத்தப்பட்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|