பதிவு செய்த நாள்
23 மே2013
00:05
மும்பை:நாட்டின் கோழிப் பண்ணை துறை ஆண்டுக்கு, 8-10 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருவதாக, இக்ரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2000வது ஆண்டில், இந்தியாவில் கோழி முட்டை உற்பத்தி, 3,000 கோடியாக இருந்தது. இது, கடந்த 2012ம் ஆண்டில், 6,600 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோன்று, கணக்கீட்டு காலத்தில், தனிநபர் முட்டை பயன்பாடு, 28 என்ற எண்ணிக்கையிலிருந்து, 55 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 2000வது ஆண்டில், உள்நாட்டில் கோழிக் கறி உற்பத்தி, 10 லட்சம் டன்னாக இருந்தது. இது, 2012ம் ஆண்டில், 34 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. தனிநபர் கோழி இறைச்சி பயன்பாடும், 0.8 கிலோ என்ற அளவிலிருந்து, 2.8 கிலோவாக அதிகரித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவில், கோழிப் பண்ணை துறை சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. என்றாலும், கோழி தீவனம் விலை அதிகரிப்பு, போதிய அளவிற்கு குளிர்பதன கிடங்கு வசதிகள் இல்லாமை, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாதது மற்றும் நோய்தாக்குதல் போன்ற பல்வேறு இடர்பாடுகளையும், இத்துறை எதிர்கொண்டு வருகிறது என, இக்ரா நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|