பதிவு செய்த நாள்
23 மே2013
00:19
புதுடில்லி:ரப்பர் இறக்குமதி மீதான வரியை, மீண்டும் உயர்த்த வேண்டும் என, மத்திய வர்த்தக அமைச்சகம், நிதி அமைச்சத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்புதான், வர்த்தக அமைச்சகம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, வருவாய் துறை, ரப்பர் மீதான இறக்குமதி வரியை, கிலோவுக்கு, 20 ரூபாயிலிருந்து, 34 ரூபாயாக அதிகரித்தது.இந்நிலையில், உள்நாட்டில் ரப்பர் விலை சரிவடைந்து, விவசாயிகள் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் வகையில், இதன் மீதான இறக்குமதி வரியை மீண்டும் உயர்த்த வேண்டும் என, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டில், தற்போது, ஒரு கிலோ ரப்பர் விலை, 160 ரூபாயாக சரிவடைந்துள்ளது. இது, கடந்தாண்டில், 230 ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது. அண்டை நாடுகளில் இருந்து, குறைந்த விலையில், அதிகளவில் ரப்பர் இறக்குமதி செய்து கொள்வதே, இதற்கு முக்கிய காரணம். எனவே, உள்நாட்டில், ரப்பர் விலை மேலும் சரிவடைவதை தடுக்கும் வகையிலும், இத்தொழில் ஈடுபட்டு வரும், விவசாயிகளை பாதுக்காக்கும் நோக்கிலும், ரப்பர் இறக்குமதி மீதான வரியை உயர்த்த வேண்டும் என, வர்த்தக அமைச்சகம், மீண்டும் நிதி அமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|