பதிவு செய்த நாள்
23 மே2013
15:30
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்று மதியம் 03.16 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 423.09 புள்ளிகள் குறைந்து 19639.15 புள்ளிகளோடு கடுமையாக சரிந்து காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 136.55 புள்ளிகள் குறைந்து 5958.15 புள்ளிகளோடு காணப் பட்டது. சீனாவின் உற்பத்தியில் தீடீர் என கடும வீழ்ச்சி ஏற்பட்டதாக அமெரிக்கா அறிவித்ததையடுத்து, ஜப்பான் பங்குச்சந்தையான நிக்கி நேற்று விட இன்று 7.3 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. இதனையடுத்து ஹாங்காங், லண்டன், பாரீஸ், பிரன்க்பர்ட், தென்கொரியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பங்குச்சந்தைகளும் கடும் வீழ்ச்சியடைந்தன. இதன் எதிரொலி இந்திய பங்குச்சந்தையையும் விட்டு வைக்கவில்லை. இன்றைய வர்த்தகம் முடிவின் போதும் சென்செக்ஸ்சும் நிப்டியும் சரிந்தே முடிந்துள்ளன. வர்த்தக முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 387.91 புள்ளிகள் குறைந்து 19674.33 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 127.45 புள்ளிகள் குறைந்து 5967.05 புள்ளிகளோடு காணப் பட்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|