தமிழகத்தில் முட்டை விலை302 காசுகளாக நிர்ணயம்தமிழகத்தில் முட்டை விலை302 காசுகளாக நிர்ணயம் ... பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி ...
நிதி அமைச்சகம் ரூ.1 லட்சம் கோடிஎரிபொருள் மானியம் வழங்க ஒப்புதல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மே
2013
00:01

புதுடில்லி:சென்ற 2012-13ம் நிதியாண்டிற்கு, டீசல் மற்றும் சமையல் எரிவாயுவிற்கு, ஒரு லட்சம் கோடி ரூபாய் மானியத் தொகை வழங்க, மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்கள், சென்ற நிதியாண்டில், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்டவற்றை, மத்திய அரசு நிர்ணயித்துள்ள விலையில், விற்பனை செய்துள்ளன. இது, அடக்க விலையை விட குறைவாகும். இதனால், சென்ற நிதியாண்டில், இம்மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கும், ஒட்டு மொத்தமாக, 1,61,029 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை, மத்திய அரசு, மானியம் மூலமாக ஈடு செய்கிறது.
இதன் ஒரு பகுதியாக, ஏற்கனவே, மத்திய அரசு, 55 ஆயிரம் கோடி ரூபாய் மானியத்தை எண்ணெய் நிறுவனங் களுக்கு அளித்துள்ள நிலையில், தற்போது, 1 லட்சம் கோடி ரூபாய் அளிக்க, மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற 2011-12ம் நிதியாண்டில், எரிபொருளை மானிய விலையில் விற்பனை செய்ததன் மூலம், இம்மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கும், 1,38,451 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இதில், 83,500 கோடி ரூபாயை மத்திய அரசு, ரொக்க மானியமாக வழங்கியது. இது, இதற்கு முந்தைய, 2010-11ம் நிதியாண்டில் வழங்கப்பட்ட தொகையை (41 ஆயிரம் கோடி ரூபாய்) விட, இரண்டு மடங்கு அதிகமாகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)