பதிவு செய்த நாள்
24 மே2013
00:01
புதுடில்லி:சென்ற 2012-13ம் நிதியாண்டிற்கு, டீசல் மற்றும் சமையல் எரிவாயுவிற்கு, ஒரு லட்சம் கோடி ரூபாய் மானியத் தொகை வழங்க, மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்கள், சென்ற நிதியாண்டில், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்டவற்றை, மத்திய அரசு நிர்ணயித்துள்ள விலையில், விற்பனை செய்துள்ளன. இது, அடக்க விலையை விட குறைவாகும். இதனால், சென்ற நிதியாண்டில், இம்மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கும், ஒட்டு மொத்தமாக, 1,61,029 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை, மத்திய அரசு, மானியம் மூலமாக ஈடு செய்கிறது.
இதன் ஒரு பகுதியாக, ஏற்கனவே, மத்திய அரசு, 55 ஆயிரம் கோடி ரூபாய் மானியத்தை எண்ணெய் நிறுவனங் களுக்கு அளித்துள்ள நிலையில், தற்போது, 1 லட்சம் கோடி ரூபாய் அளிக்க, மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற 2011-12ம் நிதியாண்டில், எரிபொருளை மானிய விலையில் விற்பனை செய்ததன் மூலம், இம்மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கும், 1,38,451 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இதில், 83,500 கோடி ரூபாயை மத்திய அரசு, ரொக்க மானியமாக வழங்கியது. இது, இதற்கு முந்தைய, 2010-11ம் நிதியாண்டில் வழங்கப்பட்ட தொகையை (41 ஆயிரம் கோடி ரூபாய்) விட, இரண்டு மடங்கு அதிகமாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|