பதிவு செய்த நாள்
26 மே2013
00:43
புதுடில்லி;நாட்டின் பருத்தி இறக்குமதி, நடப்பு சந்தைப் பருவத்தில் (அக்.,-செப்.,), 20 லட்சம் பொதிகளாக (ஒரு பொதி=170 கிலோ) அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இது, இந்தியாவில், பி.டி., பருத்தி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, 10 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாகும் என, இத்துறையைச் சேர்ந்த வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது முறை:இதே போன்று, நடப்பு சந்தைப் பருவத்தில், நாட்டின் பருத்தி ஏற்றுமதி, முன் எப்போதும் இல்லாத அளவில், இரண்டாவது முறையாக, 90 லட்சம் பொதிகளாக அதிகரிக்கும் என, கணக்கிடப்பட்டுள்ளது. இது, பருத்தி ஆலோசனை கழகம் மதிப்பீடு செய்துள்ள, 81 லட்சம் பொதிகளை காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது என, இத்துறை சார்ந்த நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து, இந்திய தொழிலக கூட்டமைப்பின் செயலர் டி.கே.நாயர் கூறியதாவது:கோவையில் உள்ள ஜவுளி நிறுவனங்களுக்கு, தேவையான பருத்தியை, வட மாநிலங்களில்இருந்து, வரவழைப்பதற்கான போக்குவரத்து செலவினம், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளும் செலவினத்தை காட்டிலும் அதிகமாக உள்ளது. குறிப்பாக, ஆப்ரிக்க நாடுகளில்இருந்து, பருத்தியை இறக்குமதி செய்து கொள்வதற்கான செலவினம் மிகவும் குறைவாக உள்ளது.மேலும், குஜராத் மாநில பருத்திஉடன் ஒப்பிடும் போது, ஆப்ரிக்காவில் உற்பத்தியான பருத்தியின் தரம் மிகவும் சிறப்பாக உள்ளது. இதனால், அந்நாட்டிலிருந்து, அதிகளவிலான பருத்தியை நிறுவனங்கள் இறக்குமதி செய்து கொள்கின்றன.இது வரையிலுமாக, நாட்டின் பருத்தி இறக்குமதி, 15 லட்சம் பொதிகள் என்ற அளவை எட்டி உள்ளது.
நடப்பு சந்தைப் பருவத்தின் இறுதிக்குள், மேலும், ஐந்து லட்சம் பொதிகள் இறக்குமதியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.பருத்தி உற்பத்தி:பருத்தி உற்பத்தியில், இந்தியா, உலகளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. சென்ற 2011-12ம் பருவத்தில், நம்நாட்டின், பருத்தி உற்பத்தி, 3.40 கோடி பொதிகளாக இருந்தது. அதேசமயம், உள்நாட்டில், இதற்கான பயன்பாடு, 2.87 கோடி பொதிகளாக இருந்தது.சென்ற 2011-12ம் சந்தைப் பருவத்தில், நாட்டின் பருத்தி இறக்குமதி, 12 லட்சம் பொதிகளாக இருந்தது. இது, இதற்கு முந்தைய பருவத்தில், 5 லட்சம் பொதிகளாக இருந்தது என, பருத்தி ஆலோசனை கழகம் தெரிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|