பதிவு செய்த நாள்
26 மே2013
00:44
சென்னை:தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா பேங்க், சென்ற 2012-13ம் நிதியாண்டிற்கு, அதன் பங்குதாரர்களுக்கு, 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றிற்கு, 14 ரூபாய் டிவிடெண்டு வழங்குவதாக அறிவித்துள்ளது.சென்ற நிதியாண்டின் நான்காவது காலாண்டில், இவ்வங்கியின் நிகர லாபம், 8 சதவீதம் அதிகரித்து, 159 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில், 147 கோடி ரூபாயாக இருந்தது.
இதே காலாண்டுகளில், இவ்வங்கியின் மொத்த வருவாய், 21 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,059 கோடியில் இருந்து, 1,284 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும், இவ்வங்கியின் மொத்த வசூலாகாத கடன், 1.33 சதவீதத்திலிருந்து, 0.96 சதவீதமாக குறைந்துள்ளது.சென்ற முழு நிதியாண்டில், இவ்வங்கியின் நிகர லாபம், 550 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய 2011-12ம் நிதியாண்டில், 501 கோடி ரூபாயாக இருந்தது. மேலும், இவ்வங்கியின் மொத்த வர்த்தகம், 3,620 கோடியிலிருந்து, 4,694 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|