பதிவு செய்த நாள்
28 மே2013
00:43
மும்பை:சென்ற, 2012-13ம் நிதியாண்டில் திவாலான, 13 கூட்டுறவு வங்கிகளின் முதலீட்டாளர்களுக்கு, டீ.ஐ.சி.ஜி.சி., 159.85 கோடிரூபாய் வழங்கியுள்ளது.மகாராஷ்டிராமகாராஷ்டிராவில் தான், மிக அதிகமாக, அதாவது, 9 கூட்டுறவு வங்கிகள், முதலீட்டாளர்களின் டெபாசிட் தொகையை திரும்ப செலுத்த முடியாமல் திவாலாகியுள்ளன. இதையடுத்து, குஜராத்மாநிலத்தில் இரண்டு வங்கிகளும், ஆந்திரா மற்றும் ஒடிசாவில், தலா ஒரு வங்கியும் திவால் நோட்டீஸ் கொடுத்தன.
மேற்கண்ட வங்கிகளின் முதலீட்டாளர்களுக்கு, அவர்கள் டெபாசிட் செய்த தொகையை, டெபாசிட் காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கழகம் (டீ.ஐ.சி.ஜி.சி.,), வழங்கிஉள்ளது.ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான டீ.ஐ.சி. ஜி.சி.,க்கு, திவாலான கூட்டுறவு வங்கியின் முதலீட்டாளர் ஒருவருக்கு, அதிகபட்சமாக, 1 லட்சம் ரூபாய்மட்டுமே வழங்கும் அதிகாரம் உள்ளது.இந்த வகையில், சென்ற நிதியாண்டில், திவாலான கூட்டுறவு வங்கிகளுள், மகாராஷ்டிராவை சேர்ந்த, பண்டாரி கூட்டுறவு வங்கி, அதிகபட்சமாக, 54.88 @காடி ரூபாய் பெற்றுள்ளது.
இதேமாநிலத்தை சேர்ந்த, சோலாப்பூர் நகரி ஆயுத்யோகிக் சஹாகாரி வங்கிக்கு, 45.76 கோடி ரூபாய்கிடைத்துள்ளது. குறைந்த தொகையாக, ஒடிசாவின் தேன்கனால் கூட்டுறவு வங்கிக்கு, 7.77 @காடி ரூபாயும், குஜராத்தின் போரியாவி மக்கள் கூட்டுறவு வங்கிக்கு, 4.54 @காடி ரூபாயும் வழங்கப்பட்டு உள்ளது.
டெபாசிட்தாரர்:கடந்த, 2011-12ம் நிதிஆண்டில், நாட்டில், 18 கூட்டுறவு வங்கிகள் திவாலாகின. இதையடுத்து, இவ்வங்கிகளை சேர்ந்த டெபாசிட்தாரர்களுக்கு, டீ.ஐ.சி.ஜி.சி.,யால், 277.31 கோடி ரூபாய்வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|